யார் இந்த ஸ்டாலின்

ஸ்டாலின் தனது பாடசாலை வாழ்க்கையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் கண்டு அதைத் துடைக்க, தனது 16 வது வயதில் அதாவது 1895 இல் கம்யூனிஸ் கட்சியுடனான உறவைத் தொடங்குகின்றார். 1890 களின் இறுதியில் பல போராட்டத்தை நடத்தியதுடன், கட்சி வாழ்வை தொடங்கிவிடுகின்றார். கட்சி வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சென்ற மென்ஷிவிக்குகள், போராட்ட நெருக்கடியில் கட்சிக் கலைப்பு வாதத்தை முன்வைத்து ஓடுகாலிகள், நடுநிலை சந்தர்ப்பவாதிகள், பலர் பலவிதத்தில் நீண்ட விடாமுயற்சியான நெருக்கடியான வர்க்க போராட்டத்தை கைவிட்டுச் சென்ற எல்லா நிலையிலும், ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை முன்நிலைப்படுத்தினார், அதற்காக போராடினார், அதைப் பாதுகாத்து நின்றார். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அவர் இரும்பு மனிதனாக இருந்ததால், அவரை லெனின் இரும்பு என்ற பெயரால் ஸ்டாலின் என்று அழைத்தார். பாட்டாளி வர்க்க, வர்க்கப் போராட்டத்தை உறுதியாக நடத்திய வரலாற்றில், அவர் ஆறு முறை தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து பலமுறை புரட்சியின் கடமையை முன்னெடுக்க தப்பியே வந்தார்.

1912 ம் ஆண்டு போல்ஷிவிக் கட்சி பிராக்கில் கூடிய போது, மென்ஷிவிக்குகளை கட்சியில் இருந்து முற்றாக வெளியேற்றியதுடன், லெனின் தலைமையிலான கட்சி தனது சுயேட்சையான பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையை ஸ்தாபன வடிவில் பகிரங்கமாக அறிவித்தனர். இந்த காங்கிரஸ் ஸ்டாலின் சிறையில் இருந்த போதும், ஸ்ராலினை மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்ததுடன், லெனின் ஆலோசனைப் படி நாட்டில் நடைமுறை வழிகாட்டும் தலைமை உறுப்பு ஒன்றை உருவாக்கியதுடன், அதன் தலைவராக அதற்கு தகுதியான ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். நாட்டின் புரட்சிகர அமைப்பாக்கல் மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும், நேரடியாக கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், 1912 இல் இருந்தே ஸ்டாலின் கட்சிக்கு வழிகாட்ட தொடங்கிவிட்டார். 1917 போல்ஷிவிக் புரட்சியில் லெனின் பங்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு லெனினை முக்கியத்துவப் படுத்திய புரட்சியை முன்னெடுக்கும் நடைமுறைத் தலைமையை ஸ்டாலின் வழங்கினார். லெனின் கோட்பாட்டு தலைமை புரட்சியில் எவ்வளவுக்கு முக்கியமாக நடைமுறை சார்ந்து வழிகாட்டலுக்கு உள்ளாகியதோ, அதேபோல் ஸ்டாலின் நடைமுறைத் தலைமை புரட்சியை முன்னெடுத்த அமைப்பை உருவாக்குவதில் கோட்பாட்டு வழிகாட்டலை ஒருங்கிணைத்தது. இந்த இரு தலைமையும் ஒரு சேர நிகழ்ந்த வரலாற்றில் தான் சோசலிச புரட்சி வெற்றி பெற்றது. இவ் இரண்டும் இன்றி சோவியத் புரட்சி என்பது கற்பனையானது. இரண்டு துறை சார்ந்த முன்னணி பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், தத்தம் பணியில் வெற்றிகரமாக இணைந்து வழிகாட்டிய வரலாறு தான், சோவியத் புரட்சியை நடத்தியது. இந்தளவுக்கு வேறு எந்த தலைவரும் புரட்சியை முன்னெடுக்கும் தலைமைப் பொறுப்பை, பல்வேறு நெருக்கடிகளில் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்கு வெளியில் இருந்த லெனின் வழங்கிய கோட்பாட்டு தலைமையும், நாட்டுக்குள் ஸ்டாலின் வழங்கிய நடைமுறை அமைப்பாக்கல் தலைமையும், ஒன்றிணைந்த புரட்சி தான் சோவியத் புரட்சியாகும்.

ஸ்டாலின் திடீரென அதிகாரத்தை கைப்பற்றினான் என்பது எல்லாம் இடது வேடம் போட்டவர்களின் வெற்று அவதூறுகளாகும.;; ஸ்டாலின் நீண்ட அனுபவம் கொண்ட, போராட்ட தலைவனாக, நெருக்கடிகளில் முன் மாதிரி போல்ஷிவிக்காக போராடிய முன்னணி தலைவராக திகழ்ந்தமையால், 1912 லேயே மத்திய குழுவுக்கு தெரிவு செய்ததுடன், நாட்டின் நடைமுறை போராட்டத்துக்கான தலைமைப் பொறுப்பை லெனினின் முன்மொழிவுடன், 1912 லேயே ஏற்றுக் கொண்டு போல்ஷிவிக் தலைவரானார். இந்த தலைமைப் பொறுப்பை சதிகள் மூலமல்ல, பாட்டாளி வர்க்க போராட்டத் தலைவனாக நடைமுறையில் இருந்தமையால், அவர் சிறையில் இருந்த போதும் கட்சி அவரிடம் தனாகவே ஒப்படைத்தது.

1917 இல் நடந்த முதல் புரட்சியைத் தொடர்ந்து, யூன் மாதம் மென்சுவிக்குகள் ஆதிக்கம் வகித்த ரஷ்ய சோவியத்தின் முதல் காங்கிரசின் மத்திய நிர்வாக குழுவுக்கு, ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், ஒரு தலைவராகவே இருந்தார். 1917 இல் பெப்ரவரி புரட்சியை நடத்தியவர்கள் போல்சவிக்குகளை கைது செய்து, லெனினை கொன்று விட அவதூறுகளை பொலிந்த போது, டிராட்ஸ்கியும், காமனேவும் சிறைப்பட்டு நியாயம் கோரி வழக்காட வேண்டும் என்றே முன்மொழிந்தனர். ஸ்டாலின் அதை நிராகரித்ததுடன், லெனினின் பாதுகாப்பை தானே பொறுப்பெடுத்தார். ஐரோப்பாவில் புரட்சி நடைபெறாமால் பாட்டாளி வர்க்க புரட்சியா? என்ற கேள்வியுடன் டிராட்ஸ்கி, ருசியாவில் சோஷலிஸத்தை சாதிக்க முடியாது என்று புரட்சியை எதிர்த்த போது, ஸ்டாலின் ~~சோஷலிஸத்துக்குப் பாதை வகுக்கும் தேசமாக ரஷ்யா இருக்கக் கூடுமென்பதை புறக்கணிக்க முடியாது.... ஐரோப்பா மட்டுமே வழிகாட்ட வேண்டுமென்ற பத்தாம் பசலிக் கருத்தைக் கைவிடவேண்டும். குருட்டுத்தனமான வறட்டு மார்க்சியமும் இருக்கின்றது. படைப்புத் தன்மை கொண்டு வளரும் மார்க்சியமும் இருக்கின்றது. இரண்டாவது வகையை ஆதரிக்கின்றேன். என்றார்.

ஐரோப்பா புரட்சியின்றி தொடரும் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறாது என்று கூறி, டிராட்ஸ்கி சோசலிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து முன்வைத்த வாதம் மற்றும் நடைமுறைகள், உண்மையில் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்தை ஒரே தாவில் தாண்டிவிடக் கோரும் இடது தீவிரத்தின் உள்ளடக்கமாகும். அராஜக வாதம் எதை கோட்பாட்டில் முன்வைக்கின்றதோ, அதையே இது பின் பக்கத்தால் வைக்கின்றது. சோசலிச சமூகம் என்பது கம்யூனிசத்தை நோக்கிய, அடுத்த கட்ட வர்க்கப் போராட்ட தயாரிப்பு மற்றும் முன்னெடுப்பு காலம் என்பதை மறுப்பதில் இருந்தே, ~~தனிநாட்டு சோசலிசம் என்ற எதிர்ப்பின் பின் உள்ள அரசியல் உள்ளடக்கமாகும். பாட்டாளிகள் வர்க்கப் போராட்டம் மூலம் கைப்பற்றும் ஆட்சி மாற்றம், வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு வடிவ மாற்றம் மட்டுமே தான். இங்கு கம்யூனிசத்தை நோக்கிய போராட்டத்தை சோசலிச சமூகத்தில் கைவிடக் கோருவது, வர்க்கப் போராட்டத்தை பின்பக்க கதவால் இழுத்து தடுப்பதாகும்.

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி லெனினின் தெளிவான நிலைப்பாட்டைப் பார்ப்போம்;. ~~சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்களால் மக்களை ஏமாற்றுவது பற்றிய உரைக்கு முன்னுரையில் ~~பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல் ஆனால் புதிய வடிவங்களில் இதன் தொடர்ச்சியாகும். தோற்கடிக்கப்பட்ட ஆனால் துடைத்தொழிக்கப்படாத ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக, மறைத்து போகாத, எதிர்ப்பைத் தருவதை நிறுத்தாத, ஆனால் எதிர்ப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை கரங்களில் எடுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தால் தொடுக்கப்படும் வர்க்கப் போராட்டமே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகும். என்றார் லெனின். ஆனால் இதை எதிர்ப்பதில் தான் இன்றைய எல்லா இடது முகமூடிகளும் சரி, அன்றைய ட்ராட்ஸ்கி மற்றும் புக்காரின் தங்கள் அரசியலை கட்டமைத்தனர், கட்டமைக்கின்றனர். இவர்கள் லெனின் காலத்தில் சந்தர்ப்பவாதமாக மூடிமறைத்தபடி இதைப்பற்றி வாய்திறந்து எதிர்க்கவில்லை. ஆனால் முடிமறைத்த வகையில் தமது ஆட்சியை நிறுவுவதன் மூலம், இதை மறுக்க முனைந்தனர். இதில் தோற்ற போது இதை எதிர்ப்பது ஒரு அரசியல் கொள்கை விளக்கமாகி அதுவே சதியாகியது.. ஆனால் ஸ்டாலின் இதை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்ததில் தான், அவர் மீதான அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன, கட்டமைக்கப்படுகின்றது.

1917 அக்டோபர் 23ம் தேதி கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி எடுத்த வரலாற்று புகழ்மிக்க புரட்சியை நடத்துவது பற்றிய முடிவில், ஆயுதம் ஏந்திய எழுச்சிக்கு தலைமை தாங்க அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இங்கு ஸ்டாலின் சதி செய்து புரட்சிக்கு தலைமை தாங்க வந்தவர் அல்ல. கட்சி தனது தலைவரை தெரிவு செய்வது இயல்பானது. இந்த பொறுப்புமிக்க நடைமுறை ஸ்தாபனப் பணியை செய்யும் தகுதி, ஸ்ராலினைத் தவிர வேறு எந்த மத்திய குழு உறுப்பினருக்கும் அன்று இருக்கவில்லை. ஆனால் இடதுசாரி பெயரில் எழுதுபவர்கள் இதைப் பற்றி வகை வகையாக, வண்ணம் வண்ணமாக எழுதுவது மட்டுமே, அவர்களின் மலட்டுப் பிழைப்பாக உள்ளது.

ஸ்டாலின் என்ற தலைவருக்கு 1919 நவம்பர் 27ம் திகதி லெனின் முன்மொழிந்த தீர்மானத்தின் படி, ஸ்ராலினுக்கு செங்கொடி பதக்கம் வழங்கப்பட்டது. இதே விருதை டிராட்ஸ்கியும் பெற்றார். டிராட்ஸ்கி செஞ்சேனை சார்ந்து பாதுகாப்பு மந்திரியாக இருந்த போதும், சோவியத் புரட்சியை பாதுகாக்க செஞ்சேனையை தலைமை தாங்கி, எதிரிகளை ஒழித்துக் கட்டிய பங்களிப்பு சார்ந்து வழங்கிய விருது, அதே கராணத்துக்காக ஏன் ஸ்ராலினுக்கு வழங்கப்பட்டது.

சோவியத்துக்கு ஆபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம், கட்சியின் விசேட வேண்டுகோள்களை நிறைவேற்றுவதில், ஸ்டாலின் முன்முயற்சியுடன் செஞ்சேனையை வழி நடத்திய திறமைமிக்க தளபதியாக திகழ்ந்த தனித்துவமான பணிக்காக வழங்கப்பட்டது. கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஸ்டாலின் பல போர்முனைகளில் பல வெற்றிகளை சாதித்ததன் மூலம், சோவியத்தை பாதுகாத்தார். ஸ்டாலின் கிராட்டில் (ஜாரீட்ஸின்) இருந்து தேவையான உணவை பெறவும், இராணுவ ரீதியாக அதை வெற்றி பெறவும் கட்சியின் வேண்டுகோளின் படி, அதை மீட்டு எடுத்தார். இந்த யுத்த பிரதேசத்தில் டிராட்ஸ்கி செஞ்சேனைக்கு தளபதியாக நியமித்த பழைய ஜார் மன்னனின் இராணுவ தளபதிகளை நீக்கி, புரட்சிகரமான செஞ்சேனை, புரட்சிகரமான தளபதிகளின் தலைமையில் அப்பகுதியை மீட்டு எடுத்தார்.

அடுத்த மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க யூக்குரேணுக்கு சென்று அப்பகுதியை மீட்டதுடன், கார்க்கோ, பேலோ ரஷ்யாவையும் மீட்டார். 1918 இல் கிழக்கு முனையில் ஏற்பட்ட ஆபத்தை எதிர் கொள்ள மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று கிழக்கு போர்முனையை வென்றார். அங்கு இருந்து மீண்ட ஸ்டாலின் புதிய பொறுப்பாக அரசாங்கச் செயலாட்சி அமைச்சராக கட்சியால் நியமிக்கப்பட்டார். இது தொழிலாளர், விவசாயிகள் கண்காணிப்பு வாரியம்;. ஊழல், நாசவேலை, கையாலாகாத்தனம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவதில், ஸ்டாலினின் பங்கு கோரப்பட்டது.

1919 இல் மார்ச்சில் எதிரி பெத்ரோகிராதை கைப்பற்ற முன்னேறிய போது, ஸ்டாலினை கட்சி அங்கு அனுப்பியது. அங்கு அவர் மாபெரும் சாதனையை சாதித்து எதிரியை நொருக்கித் தள்ளினார். பின்பு எதிரி ஓரெல் நகரை பிடித்த பின்பு, மொஸ்கோவை நான்கு மணிநேரத்தில் அடையும் வகையில் எதிரி அருகில் நெருங்கி வந்த நிலையில், மொஸ்கோவில் முதலில் கால் வைப்பவனுக்கு 10 லட்சம் ரூபிள் பரிசு அளிக்கப்படும் என்ற நிலையில், லெனின் தெனீக்கின் - எதிர்ப்புப் போரில் சகல சக்திகளும் திரளட்டும் என்றார். 1919 இல் மத்திய கமிட்டி இந்த எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்க ஸ்டாலினை நியமித்தனர். ஸ்டாலின் இந்த பிரதேசத்தை பாதுகாக்க வைத்த திட்டத்தை, கட்சி அங்கிகரித்த நிலையில், இப்போரில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்றனர். 1920 இல் முற்றாக இப்பகுதி விடுவிக்கப்பட்டது.

போலிஷ் படை தாக்குதலை தொடுத்த போது, அங்கும் ஸ்டாலின் அனுப்பப்பட்டார். ஏகாதிபத்திய தலைமையில் விரங்கல் புதிய தாக்குதலை யூக்ரேனில் தொடங்கிய போது, மத்திய குழு பின் வரும் திர்மானத்தை எடுத்தது. ~~விரங்கல் வெற்றியடைந்து வருகின்றான். கூபான் பிரதேசத்தில் கவலைக்கிடமான நிலைமை. எனவே விரங்கல் எதிர்ப்புப் போரை மிகவும் முக்கியமானதாகவும் முற்றிலும் சுயேட்சையானதாகவும் கருத வேண்டும். ஒரு புரட்சி இராணுவக் குழுவை அமைத்துக் கொண்டு, விரங்கல் முனையில் முழு முயற்சியையும் ஈடுபடுத்துமாறு மத்தியக் கமிட்டி தோழர் ஸ்டாலினுக்கு கட்டளையிடுகின்றது இதை ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம், ஒரு இராணுவ தளபதியாக நிமிர்ந்து நின்றார்.

இந்த புரட்சிகர யுத்தத்தில் ஒரு செஞ்சேனை தளபதியாக, தலைவனாக ஸ்டாலின் தனித்துவமான பணியை, லெனினால் முன்மொழியப்பட்டு மத்திய குழு அங்கீகரித்து வழங்கிய பதக்க அறிக்கையில் பேராபத்தான நேரத்தில் நானா பக்கங்களிலும் விரோதிகளின் வளையத்தால் சூழப்பட்டிருந்த பொழுது.... போராட்டப் பொறுப்புக்குத் தலைமைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஜே.வி.ஸ்டாலின், தன் சக்தியாலும் களைப்பறியாத உழைப்பாலும், தடுமாறிய செம்படைகளை திரட்டுவதில் வெற்றி கண்டார். அவரே போர் முனைக்குச் சென்று, எதிரியின் நெருப்புக்கு முன் நின்றார். தன் சொந்த உதாரணத்தால், சோஷலிஸ்ட் புரட்சிக்காகப் போராடியவர்களுக்கு உத்வேகம் ஊட்டினார். இந்த தீர்மானத்தையே இன்று இடது வேடதாரிகள் திரித்து மறுக்கின்றனர். ஸ்டாலின் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு தளபதியாக இருந்தே இருக்க முடியாது என்கின்றனர். சோவியத் புரட்சியில் ஸ்டாலின் பயந்து ஒளித்துக் கிடந்ததாகவும், வீம்புக்கும், வம்புக்கும் யுத்த முனைக்கு சென்றதாகவும், பல விதமாக அவதூறுகளை கட்டியே பிழைப்பைச் செய்கின்றனர். ஆனால் லெனின் வழங்கிய கருத்தும், பரிசும் மார்க்சிய வரலாற்று ஆவணமாக சர்வதேசிய வழியாக உள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர்.

1922 மார்ச், ஏப்பிரலில் நடந்த பதினொராவது கட்சி காங்கிரசில், கட்சி பொதுக் காரியதரிசி பதவி ஒன்று உருவாக்கப்பட்டு, லெனின் பிரேரணைக்கு இணங்க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியை ஸ்டாலின் உருவாக்கி, அதில் அதிகாரத்தை குவித்து, கட்சி உறுப்பினர்களை தனது சார்பாக நியமித்ததாக, போலி இடதுசாரி பிழைப்புவாதிகள் பசப்புகின்றனர். போல்ஸ்விக் கட்சி வரலாற்றில் லெனினுக்கு பின்பு யாரும் ஸ்ராலினை தாண்டி கட்சித் தலைவராக உயர்ந்ததில்லை. நீண்ட கட்சி வரலாற்றில் லெனினுடன் அக்க பக்கமாக போராடியதுடன், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினே மேற் கொண்டார். ஸ்டாலின், லெனின் மரணத்துக்கு முன்பே, அதாவது 1912 லேயே லெனின் முன்மொழிவுடன், கட்சியே ஸ்ராலினிடம் தலைமைப் பொறுப்பை கொடுத்திருந்தது. இதை எல்லாம் வரலாற்றில் புதைத்துவிட முயலும், இடதுசாரி வேசைத்தனம் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றது.

1924 இல் லெனின் எழுதிய சக தலைவர்கள் பற்றி, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், ஸ்டாலின் பற்றிய குறிப்பில், அவர் கையில் அதிகாரம் குவிந்திருப்பதால் அதை அவர் போதுமான முன் எச்சரிக்கையுடன் கையாள்வதில் தவறு இழைப்பார் என்ற சந்தேகத்தை முன்வைக்கின்றார். இதனால் மட்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை பிரேரிக்க கோருகின்றார். இதை அவர் குறிப்பிடும்போது, தோழர்களை அணுகும் முறைகளில் இவரை விடச் சிறந்தவர் மட்டும், அதாவது மற்றையவற்றில் அல்ல என்பதை தெளிவாக லெனின் குறிப்பிட்டார். ஆனால் இன்று இதை மறுத்து வர்க்க அரசியல் மார்க்கத்தில் பொதுமைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தையே உயிருடன் அரித்து தின்கின்றனர். இதைத் தான் அன்று குருசேவ் என்ற ஜனநாயகவாதியும் செய்தான். இந்த குருசேவ் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்ததும், ஏன் பெர்லின் மதிலை அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜனநாயகவாதி குருசேவுக்கும் இடையில் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்துக்கு இணங்க, மேற்கு ஜெர்மனி கட்டிடப் பொருளை இலவசமாக வழங்க, கம்யூனிசத்தின் பெயரில் கைக்கூலி குருசேவால் கட்டப்பட்ட மதில் மூலம், கம்யூனிசத்தை இரும்புத் திரை ஜனநாயகமாக காட்டிய செம்மல் ஆவர்.

லெனின் டிராட்ஸ்கி பற்றி, யாவரிலும் வல்லமை வாய்ந்தவர் என்றதுடன், நிர்வாகத் தன்மை வாய்ந்த அணுகுமுறை மற்றும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை குறைகளாக லெனின் சுட்டிக் காட்டினார். டிராட்ஸ்கி பற்றிய லெனின் கருத்து நிர்வாகத் தன்மையில் கட்சியை வழி நடத்தும் போது, நிர்வாக வடிவம் அதிகார வர்க்க அணுகு முறையும், தன்னம்பிக்கை வரட்டுத்தனம் சார்ந்து காது கொடுத்து கேட்பதற்கு தயாரின்மையை சுட்டிக் காட்டுகின்றார்

இங்கு ஸ்டாலின் ஒரு கட்சி செயலாளராக இருக்கும் போது, மற்றைய தோழர்களுடன் அணுகிக் கொள்ளும் போக்கில் ஏற்படும் தவறுகள், கட்சியின் உயிரோட்டமுள்ள இயங்கியலை சிதைக்கும் என்பதை லெனின் தெளிவுபடுத்துகின்றார். இங்கு இந்த விமர்சனங்களை லெனின் கட்சி வரலாற்றில் இருந்தே புரிந்து கொள்கின்றாரே ஒழிய, குறிப்பான நிலைமைகள் மற்றும் சம்பவங்களில் அல்ல. குறிப்பான நிலைமை மற்றும் சம்பவத்தில் புரிந்ததாக காட்டுவது, லெனின் மார்க்சியத்தையும், அவரின் சர்வதேசிய வீச்சையும் சிறுமைப்படுத்தி தமக்கு சதகமாக்க கொச்சைப்படுத்துவதாகும். இது போலி இடதுசாரி வேஷத்தின் பின் வர்க்க போராட்டத்தின் உயிராற்றலை கொன்றுவிடுவதாகும்;. சர்வதேசியம் மற்றும் சோவியத் புரட்சிக்கான தத்துவார்த்த தலைமையை தொடர்ச்சியாக லெனின் வழங்கி வந்ததும், கட்சியின் மற்றைய தோழர்கள் இதில் அதிகம் தேர்ச்சி பெற்ற முன்னணி தலைவர்களாக வளர்ச்சி பெறாமையும், லெனின் கட்சிக்குள்ளான முரண்பாடுகள் மேல், வெற்றிகரமாக பாட்டாளி வர்க்க தலைமையை கோட்பாடு சார்ந்து நிறுவியதுடன், மார்க்சியத்தை வளர்த்து விரிவாக்கியதன் ஊடாக, வென்று எடுத்த போக்கில் இருந்து, தனது மரணத்தின் பின்பு என்ன வகையில் இவை கையாளப்படும் என்றே அஞ்சினார். ஸ்டாலின் நடைமுறை சார்ந்து (இங்கு கோட்பாட்டு பங்களிப்பை மார்க்சியத்துக்கு தொடர்சியாக செய்துள்ளர்) அதிகமாக கட்சி வரலாற்றை கொண்டிருந்தமையும், டிராட்ஸ்கி போல்ஷ்;விக் புரட்சிக்கு முன் பின் என்ற இரு காலத்திலும், இடை நடுபாதை, எதிர்நிலை, சதி போன்றவற்றை தனது முரண்பாட்டின் மீது அடிப்படையாக கொண்டே தனது அரசியலை, பாட்டாளி வர்க்க கோட்பாடு அடிப்படை சாராத நிலையில் கையாண்டமையால், இதனால் கட்சியின் முரண்பாடு எதிர் நோக்கும் அபாயத்தை புரிந்து கொண்டார். நடைமுறையில் எதிரியை உடனடியாக அடையாளம் காண்பதும், இடைநிலை போக்கு சார்ந்து நழுவலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியை வெறுப்பது, நடைமுறை சார்ந்து போராடுபவர்கள் உடனடிக் குணாம்சமாக இருக்கின்றது. இதில் தனிப்பட்ட நபர்களின் குணம்சம் கூட இதை மேலும் ஊக்கிரமாக்கும் என்பதை காண்கின்றார். லெனின் மரணத்தின் பின்பு ஸ்டாலின் சோசலிசத்தை கட்ட முடியுமா?, இல்லையா? என்ற அடிப்படையான விவாதம் மீது (இது ட்ராட்ஸ்கி தனது தலைமையை நிறுவ உருவாக்கிய பிரதான முரண்பாடும், கோட்பாடுமாகும்), லெனின் தத்துவார்த்த பங்களிப்பை போன்று ஸ்டாலின் தனது பங்களிப்பை சோசலிசத்தை கட்ட முடியும் என்று தத்துவார்த்த துறை சார்ந்து அதை நிறுவினார். சோசலிசத்தை கட்ட முடியாது என்ற டிராட்ஸ்கியும் கட்ட முடியும் ஆனால் வர்க்கப் போராட்டமின்றி என்ற புக்காரின்; இந்த விவாதத் தளத்தில் தத்துவார்த்த துறை சார்ந்து நிறுவ முடியாது சிறுபான்மையான போது, அவர்கள் கோட்பாட்டு விவாதம் அல்லாத வழிமுறைகளை கையாளத் தொடங்கினர்.

ஸ்டாலின் பற்றிய லெனினின் கருத்தை எடுத்துக் கொண்ட லெனின் கட்சி, ஸ்டாலினை தொடர்ந்து கட்சிச் செயலாளராக தேர்ந்து எடுக்கின்றது. ஸ்டாலின் இல்லாத புதிய தலைவரை கட்சி கண்டறியவில்லை. கட்சி தனது போல்ஷ்விக் வரலாற்று போராட்டத்தினூடாக, தனது சொந்த தலைவரை தெரிந்து எடுப்பதில் உறுதியாகவே இருந்தது.

ஸ்டாலின் லெனினுக்கு பின்பாக பாட்டாளி வர்க்க தலைமையை முன்னெடுத்த போது, அவர் அதை பாதுகாப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை. பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் அவரின் மரணம் வரை, அனைத்து சர்வதேச உறவுகளில் இருந்து உள்நாட்டு உறவுகள் ஈறாக உறுதியாக விட்டுக் கொடுக்காத பாட்டாளி வர்க்க தலைவராக இருந்தார். கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தில் மார்க்ஸ் கூறியத போல் ~~இங்கு நாம் கையாள வேண்டியது அதன் சொந்த அடித்தளத்தின் மீது வளர்ச்சியுற்ற என்கிற முறையிலான கம்யூனிச சமுதாயத்தைப் பற்றி அல்ல் ஆனால் மாறாக, முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுது தான் உதிக்கும் சமுதாயத்தைப்பற்றி; அது பொருளாதார ரீதியில், அறிவுத்துறை ரீதியில் இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இன்னமும் அது உதிக்கும் கருப்பையான பழைய சமுதாயத்தின் பிறப்புச் சின்னங்களால் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது. என்று மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதற்காக, ஏன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வரையறுத்தாரோ, அதை கையாள்வதில், விளக்குவதில், முன்னெடுப்பதில் உறுதியான வர்க்க நிலையை ஸ்ராலின் கையாண்டார். இதை ட்ராட்ஸ்கி, புக்காரின் போன்றவர்கள் எதிர்த்தனர். ஏன் இன்று ஸ்ராலினை தூற்றும் அனைவரும் இதை எதிர்க்கின்றனர்.

1.12.1934ம் ஆண்டு ஸ்டாலின் எதிர்ப்பு முன்னணி தலைவர்களின் இரகசிய சதி மூலம், ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும், முன்னணித் தலைவருமான கிரோவ் படுகொலை செய்யப்ட்டதைத் தொடாந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. இந்த படு கொலைக்கு முன்பாக நடந்த 17 வது கங்கிரசில் புகாரின், ரைகோவ், டோம்ஸ்கி போன்றோர் சுயவிமர்சனம் செய்தனர். ட்ராட்ஸ்கிய வாதிகளான ஜினோவிவ், காமனோவ் ஆகியோர் கட்சியை புகழ்ந்ததுடன், தமது தவறுகளை கடுமையாக சுயவிமர்சனம் செய்தனர். இவர்கள் இனியும் கருத்து தளத்தில் போராடி ஸ்ராலினை முறியடிக்க முடியாது என்பதால் சுயவிமர்சனத்தை செய்தபடி, இரகசியமான படுகொலைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தனர். இதை டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் சர்வதேச ரீதியாக முன்வைக்க, அதைப் பெருமைபட தொழிலாளர் பாதை தமது வீரதீரச் சதிச் செயலை முன்வைக்கின்றது. டிராட்ஸ்கி தனது சுய வரலாற்றில், தனது மகன் 1923 இல் இருந்தே சட்ட விரோதமாக, லெனின் உயிருடன் இருந்த போதே கட்சிக்கு எதிராக இயங்கியதாக பெருமையுடன் குறிப்பிடுகின்றார். இந்த சதிகளில் பங்குபற்றி இன்று உயிருடன் தப்பி வாழும் நபர்கள், இந்த சதியை பெருமைபட முன்வைக்கின்றனர். இந்த படுகொலை இரகசியக் குழுக்களில் இயங்கியோர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.

இச் சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கட்சியில் கடைப்பிடித்தார்களா? 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும், புகாரின் அமைதியான முதலாளித்துவ வளர்ச்சியூடாக சோசலிசத்தை அடையாளம் என்றும், காமனோவ், ஜினோவிவ் பொருளாதாரத்தில் சோவியத் பிற்போக்காக இருப்தால் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும் முன்வைத்தனர். டிராட்ஸ்கி சோசலிசம் கட்ட முடியாது என்று கூறி அப்படி கட்டப்படின் ~~தோல்வியடையும் - அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும் என்ற கூறி எதிர்த்து நின்றார். ஆனால் ஸ்டாலின், லெனின் தொடரக் கோரிய வர்க்கப் போராட்ட அரசியலை முன்வைத்தார். அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின் ~~முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுதலடைவது நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான மிதமிஞ்சிய மற்றும் பல்வேறு வகையான அரசியல் வடிவங்களை பெற்றுத் தராமலிருக்க முடியாது; ஆனால் சாராம்சத்தில் தவிர்க்க முடியாமல் ஒன்றாகவே இருக்கும்: பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்றார். இந்த மாற்றம் தொடர்பாக லெனின் ~~மீண்டும் தொழிற் சங்கங்கங்கள் மீது, தற்போதைய நிலைமையும் ட்ராட்ஸ்கி மற்றும் புகாரினது தவறுகளும் என்ற கட்டுரையில் ~~அரசியல் என்பது பொருளாதாரத்தின் மீது அரசியல் முன்னிலை பெறாமல் இருக்க முடியாது. வேறுவிதமாக வாதிடுவதன் பொருள் மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறப்பதாகும்.....எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு (குடிமக்கள் மீது) ஒரு சரியான அரசியல் அணுகு முறையின்றி வர்க்க ஆட்சியை நிலைநாட்ட முடியாது; அதன் விளைவாக அதன் சொந்த உற்பத்தி பிரச்சினையே தீர்க்க முடியாது என்று தொடர வேண்டிய சோசலிச புரட்சியின் வர்க்கக் கடமை பற்றி தெளிவுபடுத்துகின்றார். இதை புகாரின், டிராட்ஸ்கி மறுத்து ~~தனிநாட்டில் சோசலிசம் கட்ட முடியாது அல்லது மெதுவாக மாறும் என்ற போது, இதை ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியில் அம்பலம் செய்து முறியடித்தார். அங்கு இவைகளை விவாதிக்கும் உரிமை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில், கட்சியில் கட்சி சுதந்திரம் தெளிவாக இருந்தது. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கருத்துச் சுதந்திரம் இருந்த போதும், 1926 இல் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவிய, கட்சிக்குள்; பகிரங்கமாகவே எதிர்க் குழுவைக் கட்டினர். கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்ட மார்க்சியத்தை மறுக்கும் வடிவமாக இது உருவானது. இது பொது விவாதம், பெரும்பன்மை சிறுபான்மை கட்டுப்படும் கட்சி நடைமுறை, கட்சியில் பகிரங்கமாக கருத்தை வைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான நேர்மை, என அனைத்தையும் மறுத்தே, எப்போதும் குழுவடிவம் தோற்றம் பெறுகின்றது. இதன் தொடர்ச்சியாக 1927 இல் கட்சியில் விவாதம் ஒன்றை உருவாக்கி, தொழில் மயமாக்கல் தீவிரமாக்கவில்லை என்றும், விவசாயிகளை தொழிலாளருடன் இனைக்கும் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விவசாயி முரண்பாடு இயல்பானது என்றும், அதை தீவிரமாக்கும் படி கோரி நடந்த கட்சி விவாதத்தில் அரசியல் ரீதியாக 1920 இல் நடந்தது போல் தோற்கடிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமது சிறுபான்மை கருத்தை வைத்து கட்சிக்குள் போராடுவதற்கு பதில், மொஸ்கோ மற்றும் லெனின் கிராட்டில் பகிரங்கமான அரசுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தை செய்தனர். கட்சியின் எதிரிகளை துணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியில் தான் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவியும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கு யார் கட்சி ஜனநாயகத்தை கேடாக பயன்படுத்தினர். யார் கட்சியின் உயிர்ரோட்டமான ஜனநாயகத்தை இழிவாக்கினர்? ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்து, அதை அர்த்தமற்றதாக்கிய படி கட்சிக்குள் கட்சி கட்டி, கட்சிக்கு எதிராகவே போரட்டத்தை பகிரங்கமாக வெளியில் நடத்துகின்றவர்கள் பற்றி லெனின் என்ன கூறுகின்றார்.

~~இடதுசாரி கம்யூனிசம்... என்ற நூலில் லெனின் ~~ருசியாவில் நாங்கள் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு அல்லது கம்யூனிசத்தின் முதல் கட்டத்திற்கு மாறுவதில் முதல் படிகளின் வழியாகப் போகிறோம். (முதலாளித்துவ வர்க்கம் தூக்கியெறியப்பட்டதிலிருந்து மூன்றாவது ஆண்டில்) வர்க்கங்கள் நீடிக்கின்றன: பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெல்லப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக எங்கெங்கும் அவை நீடிக்கும். ஒரு வேளை இங்கிலாந்தில் அங்குதான் விவசாயிகள் இல்லை. (ஆனால் அங்கும் சிறு உடமையாளர்கள் இருக்கிறார்கள்) இந்த காலகட்டம் குறுகியதாக இருக்கலாம். வர்க்கங்களை ஒழிப்பதன் பொருள் நிலப்பிரபுகள், முதலாளிகளை விரட்டியடிப்பது மட்டுமல்ல - அதை ஒப்பீட்டு வகையில் எளிதில் சாதித்து விட்டோம். அதன் பொருள் சிறு பண்ட உற்பத்தியாளர்களை ஒழித்து கட்டுவதும் கூட ஆகும். அவர்களை விரட்டியடிக்க முடியாது அல்லது நசுக்க முடியாது; அவர்களோடும் இணக்கமாக நாம் வாழவேண்டும்; மிகவும் நீண்ட, நெடிய, மெதுவான, எச்சரிக்கையான ஸ்தாபன வேலையால் மட்டுமே மறுவார்ப்பும், மறுபோதனையும் செய்யமுடியும்; (செய்ய வேண்டும்) அவர்கள் குட்டி முதலாளித்துவ தன்னியல்போடு ஒவ்வொரு பக்கமும் முற்றுகையிடுகிறார்கள்; அதனால் பட்டாளி வர்க்கத்தக்குள் ஊடுருவி மாசுபடுத்துகிறார்கள்; அவர்களின் குட்டி முதலாளித்துவ முதுகெலும்பற்ற நிலை, ஒற்றமையின்மை, தனிமனிதப் போக்கு, எக்களிப்பு அல்லது சோர்வு என்ற மாறும் மனோநிலை ஆகியவற்றுக்கு பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் பின்னிழுத்துத்தள்ள இடையராது காரணமாக இருக்கின்றார்கள். இதற்கு எதிர்விணையாற்றும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தாபனப்படுத்தும் பாத்திரத்தை (மேலும் அது பிரதான பாத்திரம்) சரியாகவும், வெற்றிகரமாகவும், வெல்லத்தக்கவாறும் செலுத்தும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்குள் கறாரான மையப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு தேவையாயிருக்கிறது. பழைய சமுதாயத்தின் சக்திகள் மற்றும் மரபுகளுக்கெதிரான இரத்தம் சிந்தியும், இரத்தம் சிந்தாமலும், வன்முறையாகவும் அமைதியாகவும், இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வி துறையிலும், நிர்வாகத் துறையிலும் ஒரு இடையராத போராட்டமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். பத்து லட்சம் பல பத்து லட்சங்களின் பழக்க வழக்கங்களின் சக்தி ஒரு மிகப்பெரும் பயங்கரமான சக்தி. போராட்டத்தில் எஃகுறுதியாக்கப்பட்ட கட்சியின்றி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் நேர்மையான அனைத்திடமும் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்ற ஒரு கட்சியின்றி, பரந்துபட்ட மக்களின் மனோநிலையை கூர்ந்து நோக்கி செல்வாக்கு செலுத்தும் வல்லமையுடைய ஒரு கட்சியின்றி, இம்மாதிரியான ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. லட்சோப இலட்சம் சிறு உற்பத்தியாளர்களை வெல்வதை விட மத்தியத்துவப்படுத்தப்பட்ட பெரு முதலாளிகளை வென்றடக்குவது ஓராயிரம் மடங்கு எளிதானது; இருப்பினும் அவர்கள் தங்களது சாதாரமான, தினசரி புலனறிவுக்கு உட்படாத, நழுவக்கூடிய மனோதைரியத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையின் மூலம் முதலாளிகளுக்குத் தேவையான முதலாளித்துவ வர்க்கத்தை திரும்ப நிலை நாட்டுவதற்கு விழையும் அதே விளைவைச் சாதிக்கிறார்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியின் எஃகுறுதி வாய்ந்த கட்டுப்பாட்டை எவரொருவர் சிறுமைப்படுத்துகிறாரோ (குறிப்பாக அதன் சர்வாதிகார காலங்களின் போது) அவர் உண்மையில் பாட்டாளி வர்க்கத்திற்கெதிராக முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவுகின்றார் என்று மார்க்சியத்தை தெளிவுபடவே வரையறுக்கின்றார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஆணையில் வைத்து, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சிக்கு, எதிராக ஜனநாயக மத்தியத்துவத்துக்கு புறம்பாக நடத்தப்படும் எல்லாவிதமான செயற்படும், முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியேயாகும். ஒருநாட்டில் சோசலிசத்தை கட்டமுடியுமா என்ற அடிப்படையான விடையம் தொடர்பாகவும், மாற்றுக் கருத்துக்கு 1920, 1930 களில் கருத்துச் சுதந்திரத்தை கட்சி வழங்கிவிடவில்லை என்று யாரும் நிறுவிவிடமுடியாது. அத்துடன் அங்கு ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் பிரதான ஜனநாயக வடிவமாகவும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. டிராட்ஸ்கி முதல் பலரும் தமது கருத்தை கட்சியில் வைத்து விவாதிக்கவில்லையா? அங்கு தோற்கடிக்கப்பட வில்லையா?

1927 இல் கட்சிக்கு எதிராக ட்ராட்ஸ்கி, ஜினோவிய தலைமையில் லெனின்கிராட், மஸ்கோவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எதிரிகள் உசார் அடைந்தனர். குலாக்குகள் அரசுக்கு தனியத்தை விற்க மறுத்தனர். அதே நேரம் புகாரின் - ரைகோவ் குலாக்குகள் மீது கடுமையான தாக்குதல் அவசியமில்லை என்றனர். புகாரின் விவசாயிகளைப் பார்த்து நீங்கள் (விவசாயிகள்) உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். மேலும் அவர் சோசலிசத்தை கட்டுவதைப் பற்றி ~~நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும் என்றார். கைத்தொழில் மயமாக்கல் மக்களுக்கு பெரும் சுமை என்ற கூறி, அதை கைவிடக் கோரினர். ஆனால் ஸ்டாலின் இதை மறுத்து வர்க்கப் போராட்டத்தை தொடுக்க கட்சிக்கு வழிகாட்டினார். மற்றவர்கள்; தமக்கிடையில் உள்ள முரண்பாட்டை விட, ஸ்ராலினை எதிர்ப்பது முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தனர். வர்க்கங்களை சமரசம் செய்து கொண்டு செல்ல தெரியாத சதிகாரனாகவும், அதில் கொள்கையற்றவனாகவும் ஸ்ராலினை வருணித்து, இரகசியமாக சதி செய்யவும் தயங்கவில்லை. ~~அவன் கொள்கைகள் அற்ற சதிகாரன்: பழிவாங்கவும் முதுகில் குத்தவும் மட்டுமே அவனுக்குத் தெரியும் என்றான் புகாரின். கூட்டுப் பண்ணையாக்கலில் சலுகை வழங்கிய போராட்டத்தை கோரிய போது (அதாவது ~~நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக் கொண்டு சிறுசிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம் என்று புகாரின் கட்சியிடம் சலுகையாக கேரிய போது), இங்கு வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி போராடிய போது, சலுகையின் அடிப்படையில் கொடுத்த வலது இடது ஆதாரவை, அடுத்தகட்ட வர்க்க ஒழிப்பில் கட்சி மறுத்த போதே, இப்படி புகாரின் வருணித்தார். வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி தனது வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்த போது, இடதை எதிர்க்கும் போது வலதும், வலதை எதிர்க்கும் போது இடதும் பெற்ற சலுகைகளை எதிர் கொண்டே, ஸ்ராலினின் வலதுக்கும் இடதுக்கும் எதிரான இரண்டு பக்க போராட்டத்தையே கொள்கையற்றதாக வருணித்து, சதியாக வருணிக்க முடிகின்றது. இங்கு இடது வலது அல்ல பிரச்சனை, இதை அடிப்படையாக கொண்ட வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதே பிரச்சனை. இதற்கு எதிரான போக்கே சதியாகும். வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் போக்குக்கு எதிரான போராட்டத்தையே, சதியாக வருணிப்பது ஸ்டாலின் எதிர்ப்பின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். புகாரின் இதற்காக இரகசிய சதிகளில் ஈடுபட்டதை தொடர்ந்தே, புகாரினை கட்சியின் மத்திய குழுவில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேற்றியது.

கட்சியின் உயிரோட்டமான கருத்துச் சுதந்திரத்தை, சதிப்பாணியிலான வடிவத்துக்கு நகர்த்திச் சென்றதில், ஸ்டாலின் எதிர்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. உள்ளடக்கத்தில் சதிகளின் மூலம் கட்சியின் பெருபான்மையை எதிர்க்க கிளம்பிய போது, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை முறைகேடாக கையாண்டனர். ஸ்ராலினை ஏன் எதிர்த்தார்கள். அதாவது ஸ்ரானிலிசம் என்று எதை இன்றும், அன்றும் அடையளப்படுத்துகின்றனர். ~~ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட (வர்க்கப் போராட்டத்தை தொடர) முடியுமா? இல்லையா? என்ற அடிப்டையான கேள்வி மீதே, இது மையப்படுகின்றது. ஸ்ராலினிசியமாக இருப்பது ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்ற தொடரும் வர்க்கப் போராட்டப் பாதையே. இதை எதிர்ப்போர் கட்டமுடியாது என்பதன் மூலம், வர்க்க சராணாகதியை கோரினர். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்ராலினிசியம் என்றால், அது லெனிசமாக இருக்கின்றது. அதைப் பார்ப்போம்;.

1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஷ்விக்குள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ~~ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி என்ற கட்டுரையில் ~~ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும் என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு ~~ரசியாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட ~உத்திரவாதம் ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான விளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது. என்றார். இதுதான் 1925 களில் மீளத் தொடங்கிய அரசியல் விவாதத்தின் அடிப்படையும், உள்ளடக்கமாகும். அதாவது ஸ்ராலினிசமாகவும் அதன் மீதான எதிர்ப்பாகவும் இருப்பதன் அரசியல் உள்ளடக்கமும் இதுதான். ஆனால் ஸ்டாலின், லெனின் ஓரே கட்சியின் நீண்ட காலத் தலைவர் என்ற வகையில், லெனினியத்தை முன்னெடுப்பதில் வேறு யாரையும் விட முன்னணியில் இருந்தார். லெனின்; ஏழாவது காங்கிரஸ்சில் ~~ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசின் கரங்களில் உள்ள பொருளாதாரச் சக்தியானது, கம்யூனிசத்தை நோக்கிய மாறுதலை உறுதி செய்ய போதுமானது. என்றார். கூட்டுறவு பற்றிய கட்டுரையில் ~~நம்மை இப்போது எதிர்கொண்டிருப்பது இக் கலாச்சார புரட்சிதான். இக்கலாச்சாரப் புரட்சியானது, நம் நாட்டை ஒர் முற்றிலும் சோசலிச நாடாக உருவாக்குவதற்கு போதுமானது என்றார். இது போல் லெனின் பல தரம் இதை விரிவாக்கியுள்ளார். இதை ட்ராட்ஸ்கி தொடர்ச்சியாக எதிர்த்ததுடன், இதையே ஸ்ராலினிசமாக, லெனினை முடி மறைத்தபடி மார்க்சியத்துக்கு எதிரானதாக காட்டினர்.

ஒரு நாட்டில் புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து சோசலிசத்தை கட்டுவதா இல்லையா என்ற கேள்விக்கு டிராட்ஸ்கி ~~தோல்வியடையும் -அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலிய சர்வாதிகாரமாக முடியும் என்றதன் மூலம், ஸ்ராலினை எதிர்த்தன் மூலம், மீளவும் பழைய மென்ஷ்விக்குகள் நிலையில், லெனினை மறுத்து நின்றார். இதை பின்னால் இழிவாக்கி ஸ்ராலினிசமாக்கினார். ஸ்ராலினுக்கு பதில் ட்ராட்ஸ்கி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியாது. அது தேங்கிவிடும் அல்லது சர்வாதிகார நெப்போலியன் ஆட்சியாகி விடும் என்று கூறிய படி, பழையதுக்கு திரும்பிச் செல்வதையே முன்வைத்திருக்க முடியும். இதைத் தாண்டி அவரால் தனது கோட்பாட்டுக்கு விளக்கம் சொல்ல முடியாது. இதைத்தான் இன்று தூக்கி பிடித்து காவடி எடுப்பதன் மூலம், முன்வைக்கும் ஸ்டாலின் எதிர்ப்பின் வர்க்க நோக்கம் தெட்ட தெளிவானவை. இந்த அரசியல் உள்ளடகத்தில் தான் ஸ்டாலின் முரண்பாடு உருவாகின்றது. கட்சி எதற்காக உருவாக்கி, எதற்காக போராடி புரட்சியை நடத்தியதோ (இந்த போராட்டத்தில் ட்ராட்ஸ்கி எதிர்த்தே நின்றவர்), அந்த கட்சியின் நோக்கத்தை எதிர்த்த போது, கட்சியில் தொடர்ச்சியாக தோற்றுப் போனர்கள்;. கட்சி இவைகளை விவாதிகவும், கருத்தை வைக்கவும் வழங்கிய ஜனநாயக மத்தியத்துவத்தையும், அரசியல் அதிகாரத்தையும் முறை கேடாக பயன்படுத்தினர். கட்சியின் ஜனநாயகத்தை குழதோண்டி புதைத்தன் மூலம், சதிகளை திட்டமிட்டனர்.

லெனின் தொடரும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி பஞ்சத்தை முறியடிப்பது என்ற அறிக்கையில் ~~ஆ! தொழிலாளர் வர்க்கம் பழைய முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து ஒரு இனப்பெருஞ் சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் ஒரு தனி நபர் இறந்து போகும் விவகாரத்தில், இறந்தவர் சாதாரணமாகத் தூக்கிச் சென்று விடப்படுவதைப் போல் புரட்சியின் போது நடப்பதில்லை. பழைய சமுதாயம் சிதைவுறும் போது அதன் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து ஆணியடித்து சவக்குழியில் புதைத்து விட முடியாது. நமது மத்தியிலேயே அது உருக்குலைகிறது. பிணம் அழுகுகின்றது. நமக்கு நச்சிடுகிறது. என்றார். எதிரி வர்க்கத்தைச் சார்ந்து கட்சியின் சிறுபான்மை, எதிர் புரட்சிக்கு முயற்சி எடுத்தது. நச்சிட்டது.

புரட்;சி நடந்த நாடுகளில் இருக்கக் கூடிய பொது விதி கூட. சோவியத்தில் நடந்தவை வர்க்கப் போராட்டத்தின் புற நிலைமையின் விளைவே ஒழிய, ஸ்டாலின் தனிபட்ட அகநிலையோ, நாட்டின் பொதுவான நிலைமையோ அல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் வேறுபட்ட வர்க்கத்தினை பிரதி செய்தவர்களின், ஜனநாயக விரோத வன்முறை அரசியல் தான் மஸ்கோ விசாரனையாகும்.

வர்க்கப் போராட்டத்தை சிதைக்க முயல்பவர்களை எதிர்த்து எப்படி போராட வேண்டம் என்பதை லெனின் சோவியத் அரசாங்கத்தின் உடனடிக் கடமைகள் என்ற பிரசுரத்தில் ~~முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான ஒவ்வொரு மாறுதலின் போதும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அல்லது இரண்டு முக்கிய வழிகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம். முதலாவதாக சுரண்டலாளர்களின் எதிர்ப்புகளை இரக்கமற்ற முறையில் நசுக்குவது இன்றி முதலாளித்துவம் வீழ்த்தப்படவும் ஒழித்துக்கட்டப்படவும் முடியாது. சுரண்டலாளர்களிடமிருந்து அவர்களது செல்வத்தை அறிவிலும் அமைப்புத் துறையிலும் அவர்களுக்கு உள்ள சாதகத்தை உடனடியாகப் பறித்துவிட முடியாது. அதன் பயனாய் அவர்கள் வறியவர்களின் வெறுக்கத்தக்க ஆட்சியை (ஒரு நீண்ட காலத்திற்கு) தூக்கியெறிவதற்குத் தவிர்க்க முடியாமல் முயன்று கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒவ்வொரு மாபெரும் புரட்சியும் குறிப்பாக ஒரு சோசலிசப் புரட்சியும் உள் நாட்டு யுத்தம் இல்லாமல் நினைத்துப் பார்க்கமுடியாது.... ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஊசலாட்டங்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடுகின்ற உதாரணங்களையும் உள்ளடக்கியதாகும்.... முந்தைய புரட்சிகளின் துரதிஷ்டம் என்னவென்றால் உருக்குலைக்கும் கூறுகளை ஈவு இரக்கமின்றி நசுக்க மக்களுக்கு பலத்தைத் தொடுக்கவும், அவர்களை ஒரு இறுக்கமான நிலையில் வைத்திருக்கவுமான புரட்சிகர உற்சாகம் நீண்ட காலத்திற்கு நீடிக்காதுதான் பரந்துபட்ட மக்களின் இந்த புரட்சிகர உற்சாகத்தின் நிலையின்மைக்கான சமுதாய வர்க்கக் காரணம் பாட்டாளி வாக்கத்தின் பலவீனம்தான்.... என்று தெளிவுபடவே விளக்குகின்றார். இதைத் தான் ஸ்டாலின் ~ஒருநாட்டில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கு எதிரான, சதிக் குழுக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க போராடினர். இதில் தோற்றப் போய்யிருந்தால் 1956 இல் குருசேவ் உருவாகியிருக்க வேண்டிய வரலாறு தோன்றிருக்காது. அது 1930 களிலேயே ஏற்பட்டு இருப்பதுடன், பாசிசம் உலகை ஆண்டிருக்கும்.

ஸ்டாலின் வர்க்க முரண்பாடு தொடர்ந்து இருப்பதாக, மார்க்சியத்துக்கு புறம்பாக இட்டுக் கட்டியே இந்த சதி பற்றி கற்பித்ததாக இடதுசாரி வேடதாhரிகள் மார்க்சியத்தை திரிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு பின்பு மிக தீவிரமாக மாறுவதுடன், எல்லாவிதமான முறையிலும் எதிரி வர்க்கம் போரட்டத்தை முன்னெக்கின்றது. இது ஸ்டாலின் கற்பனையல்ல. இது மார்க்சியத்தின் அரசியல் உள்ளடக்கம். இதையே ஸ்டாலின் முன்னெடுத்தார். இவை பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் அதிக அனுபவத்தை நடைமுறையில் சந்திக்க விட்டாலும், முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றுவாய்கள் பற்றி பலமுறை குறிப்பிட்டே எழுதியுள்ளனர். அவைகளை நாம் பார்ப்போம்.

மார்க்ஸ் ~~பிரான்சில் வர்க்கப் போராட்டம் என்ற தலைப்பில் பொதுவாக வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக் கட்டுவதற்கு, அவை தங்கியிருக்கும் எல்லா உற்பத்தி உறவுகளைனயும் ஒழித்துக் கட்டுவதற்கு, இந்த உற்பத்தி உறவுகளுக்குப் பொருத்தமான எல்லா சமூக உறவுகளையும் ஒளித்துக் கட்டுவதற்கு, இந்த சமூக உறவுகளில் இருந்து விளையும் எல்லாக் கருத்துகளையும் புரட்சிமயமாக்குவதற்கு அவசியமான மாறுதலுக்கான முறை என்கிற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, புரட்சியின் நித்தியத்துவத்தைப் பிரகடனப்படுத்தவது சோசலிசம் என்றார்.

இதையே லெனின் ~~வர்க்கங்களை ஒழிப்பது ஒரு நீண்ட, இடர்பாடுகள் மிக்க மற்றும் உறுதியான வர்க்கப் போராட்டத்தைக் கோருகிறது. மூலதனத்தின் அதிகாரம் தூக்கியெறியப்பட்ட பிறகு முதலாளித்துவ அரசு நொருக்கப்பட்ட பிறகு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்ட பிறகு (பழைய சோசலிசம், மற்றும் பழைய சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் ஆபாசமான பிரதிநிதிகள் கற்பனை செய்வது போல்) வர்க்கப் போராட்டம் மறைந்து விடுவதில்லை; மாறாக வெறுமனே அதன் வடிவங்களில் மாறுதலடைகிறது; மேலும் பல விவகாரங்களில் மிகவும் கடுமையானதாக மாறுகின்றது என்றார் லெனின்.

இதை மேலும் அவர் ~~பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அரசியலும் பொருளாதாரமும் என்ற பிரசுரத்தில் ~~பாட்டாளி வர்க்கத்தின் கீழ் சுரண்டும் வர்க்கத்தினர், அதாவது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் மறைந்து விடவில்லை; எல்லோரும் ஒரே சமயத்தில் மறைந்து விடவும் முடியாது, சுரண்டலாளர்கள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒழிக்கப்பட்டுவில்லை... இன்னமும் விசாலமான சமூகத் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களது எதிர்ப்பின் சக்தி ஒரு நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகாரிக்கின்றது. மக்கள் தொகையில் இருக்க வேண்டியதில் அவர்களது எண்ணிக்கையை விட ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரும் முக்கியத்துவமுடையதான வகையில் அரசு, இராணுவம் மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் ~கலை அவர்களுக்கு மேலாண்மையை, ஒரு மிகப்பெரிய அளவிலான மேலாண்மையைக் கொடுக்கின்றது. வென்ற சுரண்டப்படுபவர்களின் முன்னணிக்கு அதாவது பாட்டாளி வர்க்கத்தக்கு எதிராக தூக்கியெறியப்பட்ட சுரண்டலாளர்கள் தொடுக்கும் வர்க்கப் போராட்டம் ஒப்பிட முடியாதவாறு கசப்பானது. மேலும் புரட்சியைப் பற்றி பேசுகையில், இந்தக் கருத்தோட்டம் சீர்திருத்த மாயைகளால் இடமாற்றம் செய்யவில்லையானால், இது வேறானதாக இருக்கமுடியாது. என்றார் லெனின். இதைத் தான் ஸ்டாலின் பின்பற்றினர். லெனின் வர்க்க போதனைகளை உறுதிபட முன்னெடுப்பதில் அவர் இரும்பாக அதாவது ஸ்ராலினாக இருந்தார். இந்த வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்த போது, அதில் சில கடுமையான தவறுகளைச் செய்தார். அவை என்ன? எப்படி இத்தவறுகள் நேர்ந்தன. இதற்கு பதிலாக எதை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

நன்றி தமிழ் சர்க்கிள் : - http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_16.htm

நன்றி புத்தகப்பிரியன் : - http://puthagapiriyan.blogspot.com/2007/11/blog-post_29.html

தஸ்லிமாவின் மேல் பா.ஜ.க காதல்!!



நன்றி :- தி ஹிந்து

மார்க்சிய அரிசுவடி-பகுதி 6

சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் உறவுகள் என்னனென்ன? . என்ற கேள்விக்கு
இரண்டே இரண்டு விடைகள்தான் இருக்க முடியும் . அந்த விடைகள்
ஒன்றுக்கு ஒன்று முரணானவை என்பதை நாம் பார்க்கிறோம்

இந்த கேள்விக்கு கருத்துமுதல் வாதம் என்ன விடை பகர்ந்தது
என்பதை இதுவரை கண்டோம் .

இந்த கேள்விக்கு பொருள்முதல்வாதம் என்ன விடை தருகிறது
என்பதை இப்போது பார்ப்போம்.

பொருள்முதல்வாதம் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில்
என்னென்ன வகையாக மாறி வந்துள்ளது என்பதை பார்க்கவேண்டும் முதலில்

ஏனெனில் எந்த கருத்துக்கும் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா?

மனிதனின் அறியாமையில் இருந்து கருத்துமுதல் வாதம் பிறந்தது
சமுதாய வரலாற்றிலே ஆன்மீக கருத்தோட்டங்களை ஆதரித்த சக்திகள்
எல்லாம் இந்த அறியாமையை பேணிப்பாதுகாத்து ,வளர்த்து வந்தன.
ஆகவே அறியாமையை ஆன்மீகவாத அல்லது கருத்துமுதல் வாதம்
வளர்த்து வந்தது என்றால் இந்த அறியாமையை எதிர்த்து விஞ்ஞானம்
நடத்திய போராட்டத்திலே பொருள் முதல் வாதம் பிறந்தது.

விஞ்ஞானம் பொருள்முதல்வாதத்தின் பக்கம் இருப்பதனாலேயே
அதை எதிர்த்து கடுமையான போராட்டங்களை ஆன்மீகவாதம்
நடத்தி வந்து இருக்கிறது வரலாற்றில்.

பொருள்முதல்வாதம் என்ன சொல்கிறது?
-------------------------------------------------------

வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் இடையே,பொருளுக்கும் ஆன்மாவுக்கும் இடையே
ஒரு குறிப்பிட்ட உறவு உண்டு என்று பொருள்முதல்வாதிகள் பளீரென பதில்
அளிக்கிறார்கள்

பொருள்முதல் வாதிகளுக்கு வாழ்நிலைதான் பொருள்தான் மூல ஆதாரமான
அம்சம். அதுதான் முதலில் இருந்தது ; ஆன்மா என்பது மனம் என்பது
இரண்டாம் பட்சமானது. பொருளுக்கு பின்னால் அது வந்தது அது பொருளை
சார்ந்துதான் ஆன்மா இயங்குகிறது.

"மனம் என்பது பொருளின் அதிஉன்னதமான படைப்பே தவிர வேறில்லை"
என்கிறார் எங்கெல்ஸ் (லுத்விக் பயர்பாக்ஸ் என்ற நூலில்)

மனிதன் எப்படி சிந்திக்கிறான் என்றால் கருத்துமுதல்வாதிகள் ஒரு பதில்
சொல்வார்கள் ஆனால் பொருள்முதல் வாதிகள் இப்படி சொல்வார்கள்
அதாவது மூளை என்ற ஒன்று இருப்பதனால்தான்மனிதன் சிந்திக்கிறான் என்று.

பொருள்,வாழ்நிலை என்பது பிரத்யட்ச உண்மை; அவை நம் மனதிற்கு வெளியே
நிலைபெற்று உள்ளன; மேலும் அவை இருந்து இயங்குவதற்கு சிந்தனையோ,மனமோ
தேவையில்லை. அதேபோல பொருள் (மூளை ) இல்லாமல் சிந்தனை இருக்கவே
முடியாது . பூதவுடலை சார்ந்து நிற்காமல் சுதந்திரமாக சுயம்புவான ஆன்மா
ஒன்று இருக்கவே இயலாது என்பதாகும்.

சரி பெர்க்கிலி சொல்லியவற்றிற்கு பொருள்முதல்வாதம் என்ன பதில்
சொல்கிறதுன்னு பார்ப்போம்

1.நம் சிந்தனையில் மட்டுமே பிரபஞ்சம் இருக்கிறது என்பது உண்மையா

இதில் அகநிலை யதார்த்தம் புறநிலை யதார்த்தம் என்ற இரண்டு வருகிறது

பிரபஞ்சம் என்பது ஒரு அகநிலை யதார்த்தம் என அகநிலை கருத்துமுதல்
வாதிகள் சொல்கிறார்கள்

பிரபஞ்சம் என்பது புறநிலை யதார்த்தம் என பொருள்முதல் வாதிகள் சொல்கிறார்கள்

பிரபஞ்சமும் ,பொருட்களும் நம் சிந்தனைக்குள்தான் இருக்குன்னு பெர்க்கிலி நிரூபிக்க
முயல்கிறார் அதற்காக முதலில் அந்த பொருட்களை குணாம்சங்களாக எடுத்துகொண்டு
(நிறம்,மணம்,பருமன்)அவற்றை பிரித்து சித்தரிக்கிறார்.

1.யார் யார் தங்களுடைய ஐந்து புலன்களின் மூலம் பொருட்களை காண்கிறார்களோ
அதற்கு தக்கவாறு குணாம்சங்கள் மாறுகிறது அதனால் அந்த பொருள்களுக்குள்
குணாம்சங்கள் இல்லை என்றும் அவை எல்லாம் நம் ஒவ்வொருடைய மனதில்தான்
இருக்கிறதென்றும் எடுத்துகாட்டுகிறார்

2இதிலிருந்து ஒரு முடிவுக்கு வருகிறார் அதாவது பொருள் என்பது குணாம்சங்களின்
தொகையே இவை அகநிலையில்தான் இருக்கிரது புறநிலையில் இல்லை
எனவே பொருள் என்று ஒன்று இல்லை .

இதற்கு பதில் கூறுகிறார்கள் பொருள்முதல் வாதிகள் எப்படி

உதாரணமாக சூரியன் என்ற உதாரணத்தை எடுத்துகொண்டு அதை விவரிக்கும்
பெர்க்கிலி சூரியன் வட்டவடிவமாக சிகப்பு தட்டா தெரியுதா அது ஒரு புறநிலை
யதார்த்தம் என சொல்றீங்களா என கேட்டுவிட்டு தர்க்க முறைப்படி
சூரியன் சிகப்பாகவும் இல்லை வட்டதகடாகவும் இல்லை என சொல்லி ஆகவேச்
சூரியன் என்பது புறநிலை யதார்த்தம் அல்ல என வாதிடுகிறார்.

ஆனால் விஞ்ஞானத்தை துணைக்கழைத்து இந்த விசயத்தை ஆராயும் நாம்
சூரியன் இருக்கத்தான் செய்கிறது என்பதை நிரூபிக்கிறோம்.

நாமும் பெர்க்கிலி சொல்லுவதுபோல சூரியன் வட்டதகடாகவோ சிகப்பாகவோ
இல்லை என்பதை ஒத்துகொள்கிரோம் ஆனால்

இப்போ விவாதம் அதுவல்லவே பொருட்களின் குணாம்சங்களையா பேசுகிரோம்
அல்லவே அல்ல பொருட்கள் உண்டா இல்லையா ? என்பதுதானே கேள்வி

அது வட்டமா இருக்கு சிகப்பா இருக்கு அல்லது வேற மாதிரியா இருந்துட்டு போகுது
அது இருக்கா இல்லையான்னா ? நேரடியான பதில் இல்லை பெர்க்கிலியிடம்

பொருள்வகைப்பட்ட யதார்த்தத்தை நம்புலன்கள் திரித்து கூறுகின்றனவா என்பதல்ல
இங்கு விவாதம் அதற்கு பதிலாக இந்த யதார்த்தம் நம் புலன்களுக்கு அப்பால்
புலன்களுக்கு வெளியே இருக்கிறதா இல்லையா என்பதே விவாதம்.

சரி அவர்கள் கூறுவது போலவே நம் சிந்தனைக்குட்பட்டுதான் பிரபஞ்சம் இருக்குய்யான்னு
சொல்வோம் .

மனிதன் உண்டாவதற்கு முன்பு பிரபஞ்சம் இருந்ததா இல்லையா ?

ஆக மனிதன் மனம் இவை எல்லாம் உண்டாவதற்கு முன்பே பிரபஞ்சம்
இருந்தது என்பதுதான் உண்மை இது விஞ்ஞானம் கூறும் உண்மை .

மேலும் பெர்க்கிலியின் இரண்டு வாதங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
.

மார்க்சிய அரிசுவடி-பகுதி 5

இதுவரை பெர்க்கிலி பாதிரியார் என்ன சொல்கிறார் என புரியாதவர்களுக்கு

ஒரு தொகுப்புரை தரலாம்னு நினைக்கிறேன் .

ஏன்னா எதையும் தொகுத்து பார்த்தா புரியாம இருக்கிறதும் புரியும் .

தத்துவஞான ரீதியாக அகவியல் கருத்துமுதல் வாதம் அல்லது ஆன்மீக வாதம்
என்றால் என்னவென பெர்க்கிலிதான் ஒளிவு மறைவு இல்லாமல் பட்டவர்த்தனமாக
விவரித்தார்.

"நமது மனதுக்கு அப்பால், மனதுக்கு வெளியே ஒன்று இருப்பதாக நினைத்துகொண்டு
எதை நம்புகிறோமோ அது பொருள் அல்ல . பொருட்கள் உண்டு என நாம் நினைப்பதற்கு
காரணம் நாம் அவற்றை கண்ணால் காண்கிறோம் ,கையால் தொடுகிறோம்
என்பதுதான். இப்படி பட்ட உணர்ச்சிகளை நமது புலன்களுக்கு அவை கொடுப்பதால் தான்
பொருட்கள் உண்டு என்று நம்புகிறோம்,

ஆனால் புலன் உணர்ச்சி என்பது என்ன ? அவை நம் மனதில் எழும் எண்ணங்கள் தானே!
ஆகவே புலன்களின் வாயிலாக நாம் காணும் பொருள்கள் எல்லாம் நமது எண்ணங்கள்
தவிர வேறு அல்ல, மேலும் இந்த எண்ணங்கள் நமது மனதுக்கு வெளியே நிலைபெற்று
இருக்க முடியாது"

என சொல்லி முடிச்சுட்டார்

அதாவது ஒரு பொருள்னா அதை எப்படி நாம் உணர்கிறோம் புலன் உணர்ச்சிகள் மூலம்
புலன் உணர்ச்சிகள் எண்ணங்கள் தானே அப்போ பொருள் =எண்ணங்கள் என நேராக
ஒரே போடாக போட்டு விட்டார். எண்ணங்கள் என்பவை மனதுக்கு வெளியே இல்லை
எனவே பொருட்களும் மனதுக்கு வெளியே இல்லை.

சரிய வெளியே இல்லை அவை என்ன ? அதாவது பொருட்கள் என்ன ?
இந்த கேள்வி வருதுல்ல ?

அதற்க்கு பதில் :
பொருள்கள் இல்லை எல்லாம் மாயை என மறுக்கவில்லை
அவர் பொருட்கள் இருக்கின்றன ஆனால் அவை எல்லாம் புலனுணர்ச்சியின்
வடிவத்திலேயே உள்ளன. இந்த புலன் உணர்ச்சிகள்தான் அவற்றை நாம்
அறியும்படி செய்கின்றன. அதிலிருந்து அவர் வரும் முடிவு இதான்
பொருட்களும் அவற்றை பற்றிய நமது புலனுணர்ச்சியும் ஒன்றுதான் என்பதுதான்.
அதாவது பொருள் =புலனுணர்ச்சி

இப்படி சொல்லிட்டா விட்டுட முடியுமா ? எப்படியய்யா இதை சொல்றீங்கன்னு
கேட்பம்ல

அதற்கு பதில் :

நாம் கண்ணால் ஒரு பொருளை பார்கிறோம் ,தொடுதலின் மூலமாக ஒரு அதன்
திடநிலையை அறிகிறோம் ,முகர்ந்து பார்த்து அதன் வாசனையை அறிகிறோம்
இப்படியே நமது எல்லா உறுப்புகளின் வாயிலாகவும் அதன் பல்வேறு தன்மைகளை
உணர்கிறோம். வெவ்வேறு புலன் உணர்ச்சிகள் வெவ்வேறு எண்ணங்களை
தறுகின்றன அதன் கூட்டு சேர்த்து அவற்றிற்கு பொதுப்பெயர் கொடுத்து
அவற்றை பொருளாக கருதும் படி செய்கிறோம்.

"உதாரணமாக ,ஒரு குறிப்பிட்ட நிறமும் சுவையும் மனமும் வடிவமும் திரட்சியும்
ஒன்றாய் கூடியிருப்பதைக் கண்ட பிறகு அவற்றையெல்லாம் கொண்டு ஒரு குறிப்பிட்ட
பொருளை குறிப்பதாக கொள்கிறோம். அதை ஆப்பிள் பழம் என்கிறோம்
இவ்வாறே வெவ்வேறு எண்ணங்களை சேர்த்து மரமாகவும் கல்லாகவும்
ஆகின்றன." என்கிறார் பெர்க்கிலி.

ஆகவே பிரபஞ்சமும் அதில் உள்ள பொருட்களும் மனதுக்கு வெளியே
இருப்பதாக நினைப்போமானால் நாம் மனமயக்கத்துக்கு ஆளாகுவோம்
என்கிறார் .

பொருட்களின் குணாம்சங்கள் தனித்துவமானது என்பதையும்
களைய முயல்கிறார் பெர்க்கிலி

ஒவ்வொரு பொருளுக்கும் இன்ன நிறம், இன்ன சுவை, இன்னமணம்
இன்ன எடை என்று இருப்பதால் தானே பொருட்கள் இருக்கிறது
என்கிறீர்கள் அந்த குணாம்சங்கள் அந்த பொருட்களிடம் கிடையாது,
நம் மனதில்தான் இருக்கிறது என்று நிரூபிக்கிறேன் , இதோ

ஒரு துணி , இதுசிகப்பு என்று நீ சொல்கிறாய் உண்மையில் இது
சிகப்புதானா? அந்த சிகப்பு துணியில் அடங்கி இருப்பதாக நீ நினைக்கிறாய்
நிச்சயமாய் அப்படித்தானா? மனிதனின் கண்கள் போலில்லாமல் வேறு மாதிரி
கண்கள் உடைய மிருகங்கள் இருப்பதை நீ அறிவாய் அவை அந்த பொருளை
சிகப்பு நிறத்தில் பார்க்காது அதேபோல் மஞ்சள் காமாலை உள்ளவனுக்கு
அந்த துணி மஞ்சளாக இருக்கும் அதுக்கென்ன சொல்கிறாய் ? அதன்
நிஜமான நிறம்தான் எது? நிலமைகளை பொருத்தது என சொல்கிறாயா
அப்படியானால் சிகப்பு என்பது அந்த பொருளில் இல்லை நமது மனதில்தான்
உள்ளது.

பிறகு இன்னொரு உதாரணம் கொடுத்தார் . இந்த துணி லேசாக இருக்கிறது
என்கிறாயா ? சரி இந்தத் துணி ஒரு எறும்பின் மீது விழுந்தால்,நிச்சயமாக
எறும்புக்கு அது கனமாகப்படும். இதில் யார் சொல்வது சரி? சரி அந்த துணி
சுடுகிறதாக நீ நினைக்கிறாயா? நீ காய்ச்சலில் படுத்திருந்தால் அப்போது
அது உனக்கு சில்லென்று இருப்பதாக தோன்றும். ஆக நாம் பல மாயைகளுகு
ஆளாகிறோம் என்பதுதான் விசயம், பொருட்கள் என்பவை நமது மனதிலேயே
இருக்கின்றன என்கிறேன்"

பொருட்களிடமிருக்கும் அவற்றின் எல்லா குணாம்சங்களையும் நீக்குவதன்
மூலம் அவற்றிற்கு தனிபட்ட இருத்தல் என்பதை மெய்பிக்க முயல்கிறார்
பெரிக்கிலி. அதன் மூலம் பொருள் என்பதே ஒரு கருத்துதான் என முடிவுற்று வருகிறோம்.

சரி எல்லாம் நம் மனதின் உள்ளேதான் இருக்கின்றன என்பது உண்மையானால்
புற உலகு என்பதே கிடையாது என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும்

இந்த வாதத்தின் முடிவு வரைக்கும் போனால் என்னாகும்

இந்த உலகத்தில் நான் ஒருவந்தான் இருக்கிறேன் என்ற முடிவுதான் வரும்

"நான் ஒருவந்தான் இருக்கிறேன் மற்றவர்கள் எல்லோரும் இல்லை.
ஏனென்றால் என்னுடைய எண்ணெங்களைக் கொண்டுதானே நான் மற்ற
மனிதர்களை அறிகிறேன் ; பிற பொருட்களை போலவே, மற்ற மனிதர்களும்
எனக்கு எண்ணக்குவியல்களே" என்று கூறவேண்டிய நிலமைக்கு வந்து விடுகிறோம்.

பொருள் ஒன்று இல்லை எனும் வாதம் தர்க்க ரீதியாகவும்
முரண்பாடு இல்லாமலும் இருக்கவேண்டுமானால் இந்த அதிதீவிர முடிவான
"நான் ஒருவனே இருக்கிறேன்" எனும் முட்டாள் தனமான
முடிவுக்கு வந்து விடுகிறது .

முடிவாக

தத்துவஞானத்தின் முடிவான பிரச்சனைக்கு கருத்துமுதல்வாதம் சொல்வது மூன்று
விசயங்கள்
1.ஆன்மாதான் உலகை சிருஸ்டிக்கிறது
2.நமது மனதுக்குவெளியே உலகம் என்று ஒன்றில்லை
3.நமது எண்ணெங்கள்தான் பொருட்களை சிருஸ்டிக்கின்றன

1.ஆன்மாதான் உலகை சிருஸ்டிக்கிறது

ஆன்மாதான் உலகை சிருஸ்டித்தது என்று எல்லா மதங்களும்
அடித்து பேசுகின்றன . இதை இரண்டு விதமா சொல்கிறார்கள்

ஒன்று: கடவுள்தான் உலகை படைத்தார் . அது நமக்கு வெளியே
அப்பால் உண்மையிலேயே இருக்கிறது .இது எல்லா மதங்களிலும்
காணப்படும் வாதம்

இரண்டு : ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற எண்ணங்களை
உருவாக்கியதன் மூலம் கடவுள் உலகம் என்ற மாயையை உருவாக்கினார்

(பொருள் கலப்பற்ற ஆன்மீக வாதம் ) என்று இது அழைக்கப்படுகிறது.
இதுதான் பெர்க்கிலி பாதிரியார் சொன்னது. ஆன்மா ஒன்றுதான்யாதர்த்ததில்
இருப்பது ஆன்மாவின் சிருஸ்டிதான் உலகம் என்கிறார்.

2.நமது மனதுக்குவெளியே உலகம் என்று ஒன்றில்லை

நமது மனதுக்கு வெளியே பொருட்கள் இல்லை என்பதை
பெர்க்கிலி நிரூபிக்க விரும்பினார். அதற்க்காகத்தான் அவர்
பொருட்களின் குணாம்சங்களை அந்தந்த பொருட்களுக்கு சொந்தமானவை
என நாம் சொல்வதை மறுத்தார்.

பொருட்களின் குணாம்சங்கள் நமது மனதுக்குள்தான் இருக்கின்றன
என்று அடித்து கூறினார்.மேசை நாற்க்காலி எல்லாம் நமது மனதுக்குள் தான்
இருக்கின்றன மனதுக்கு வெளியே இல்லை என்று கருத்து முதல் வாதிகள் சொல்வது.

3.நமது எண்ணெங்கள்தான் பொருட்களை சிருஸ்டிக்கின்றன
சிந்தனையின் பிரதிபலிப்புதான்பொருட்கள் என்றால் என்ன அர்த்தம்?
பொருட்கள் என்கிற மாயையை மனதுதான் சிருஸ்டிக்கிறது.
பொருள் என்கிற எண்ணம் நமது சிந்தனையில் உதிக்கும்படி செய்வது
மனதுதான்.

பொருட்களிலிருந்து புலன்களின் மூலமாக நாம் பெறும் புலனுணர்ச்சி
நமது மனத்திலிருந்து பிறக்கின்றனவே தவிர அந்த பொருட்களில்
இருந்து பிறப்பதில்லை. ஆகவே இந்த காரணங்களை உத்தேசித்து
இந்த உலகம் என்ற எதார்த்தமும் ,பொருட்களும் இருக்க காரணம்
மனதுதான்.

எனவே நம்மை சூழ்ந்திருக்கும் புற பொருட்கள் மனதுக்குள்ளேதான்
இருக்க முடியுமே தவிர அவற்றிற்கு வெளியே இல்லை: அவை
நமது சிந்தனையில் பிரதிபலிப்பாகத்தான் புறப்பொருள் இருக்கிறது.

ஆனால் நமது மனம் இந்த எண்ணங்களை தானாகா சிருஸ்டிக்க முடியாது
அப்படி சிருஸ்டிக்க முடிந்து இருந்தால் தன் விருப்பம்போல உலகை
மனம் உருவாக்கி இருக்கும் அல்லவா? அப்படி விரும்பியதெல்லாம்
மனம் சிருஸ்டிக்கவில்லை என்பதை காண்கிறொம் .

இந்த மனம் முதலியவற்றையெல்லாம் விட அதிகவல்லமை படைத்த
கடவுள் என்ற விசயத்தை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிறார்
பெர்க்கிலி.

"கடவுள்தான் மனதை சிருஸ்டிக்கிறார் அந்த மனதுக்குள்ளே நாம் சந்திக்கும்
இந்த உலகத்தை பற்றிய எண்ணெங்களை நம்மீது சுமத்தி வைக்கிறார்."
என்கிறார்

இதற்கு பொருள்முதல் வாதம் தரும் பதில் என்னவென்பதை இனிமேல்
பார்ப்போம்

மார்க்சிய அரிசுவடி -பகுதி4

ஜி பெர்க்கிலி (1683-1753 ) இப்படி சொன்னார்

"உலகத்தின் வலிமைமிக்க கட்டமைப்பாய் இருக்கும் எல்லா பொருள்களும் மனிதில் அன்றி வெளியே வாழமுடியாது என்றார்"

அவரது உரைகள் இதான் 1. நமது உணர்வுக்கு வெளியே ஒன்றுமே இல்லை;
2.ஏதாவது ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது நமது புலனுணர்வுக்கு எட்டுகிறது
என்று பொருள் ; அவ்வாறு எட்டவில்லை என்றால் ,அப்படி ஒரு பொருள்
இல்லவே இல்லை என்று கொள்ளவேண்டும்

இந்த அறுதி உரை (அதென்னங்க அறுதி உரைன்னா இதாம்பா முடிவுன்னு சொல்வது )

ஆனால் பொருள்முதல் வாதம் என்ன சொல்லுதுன்னா

1.நமது புலனுணர்வுக்கு எட்டுகின்ற பொருட்கள் நம்மை சார்ந்திராமல்,
நமது உணர்வுக்கு வெளியே சுதந்திரமாக இருக்கின்றன;

2.நமது புலனுணர்வுக்கு எட்டுகின்ற பொருட்கள் , நமது புலன்களால்
அறியபடாவிடினும் கூட இருந்து வருகின்றன

பொருளை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் நமது புலனுணர்வே; எனவே"பொருள் என்பதும்
புலனுணர்வு என்பதும் ஒன்றுதான்" என்கிறார் பெர்க்லி.

இப்படி சொல்வது புலனுணர்வின் மூலமாக அறிதல் அன்றி நமக்கு பொருள்களை பற்றி
நமக்கு வேறு ஒன்றுமே தெரியாது என்ற கூற்றுக்குள் அடங்கிவிடுகிறது . ஒரு பண்டத்திற்கு
மதிப்பு (value) உண்டு என்று நமக்கு தெரியும், ஆனால் இதை எந்த ஒரு முறையாலும்
கண்ணால் காணவும் புலனால் உணரவும் முடியாது .

ஒளி ஒரு வினாடியில் மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது
என்று நமக்கு தெரியும் மனிதன் இத்தகைய வேகத்தை புலனால் உணரமுடியாது மனதால்
கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.

"மதிப்பு" என்பது கருத்துரு என சொல்கிறோம் அதாவது புலனுணர்வுகளால் உலகின் அனைத்தையும் உணர்ந்து விட முடியாது கருத்துருக்கள் வேணும் நாமே நடைமுறை வாழ்வில் கருத்துரு இல்லாமல் பேசிகொள்ள முடியாது "வட்டம் " என்பது ஒரு கருத்துருதான் இதைபற்றி நாம் தனி பகுதியாகவிரிவாக காணலாம் .கருத்துரு என்பது மனித அறிவின் முக்கியமான ஒரு பகுதி இந்த கருத்துருவை அப்படியே விட்டுவிட்டார் நம்ம பெர்க்கிலி (concept) கருத்துரு இல்லாமலேயே விரிகிறது அவரது போதனை கருத்துரு என்பதை மறுக்கும் விஞ்ஞானத்துக்கு பக்கம் கூட வரமுடியாதே புலனுணர்வில் இல்லாத ஒன்று உலகத்திலேயே இல்லை என்று
சொன்ன பெர்க்கிலி இப்படியும் சொன்னார்

" ஆனால் எனது புலன்களால் உண்மையில் அறியப்படும் கருத்துக்களோ எனது சித்தத்தை பொருத்தவை அல்ல (இந்த இடத்தில் கொஞ்சம் கவனிக்கவும் சித்தத்தை பொருத்தது இல்லை என்றால் சித்தத்தின் விருப்பத்தை பொறுத்தது இல்லை என கொள்ளலாம் ஏனென்றால் இதற்கு முன்பு அவர் புலனுணர்வுக்க்கு வெளியே எதுவும் இல்லை என சொல்லி இருக்கிறார்
இந்நிலையில் சித்தத்தை பொருத்தது இல்லை என சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தலாம் அதாவது புலனுணர்வுக்கு வெளியே பொருள் இல்லை ஆனால் புலன்களை நான் அறிவது எனது சித்தத்தின் விருப்பத்தை சாராமல் இருக்கிறது என்கிறார்)

முழுமையான பகல் வெளிச்சத்தில் நான் கண்களைத் திறக்கும் போது நான் கண்ணால் காண்பதும் காணாமல் இருப்பதும் எனது சித்தத்தை பொருத்தது அல்ல . அதே போல , என்னென்ன பொருட்கள் என் கண்களில் படவேண்டும் என்பதையும் நான் முடிவு செய்ய முடியாது. செவிப்புலனும் மற்ற புலன்களும் இதே போன்றதுதான். இப்புலன்களின் பதிய படுகின்ற
கருத்துக்கள் என் சித்தத்தால் படைக்கப்படுவன அல்ல" 1


பெர்க்கிலி சொல்வது உண்மைதாங்க நம்ம கண்ணுல என்ன விழனும் என்ன விழக்கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது .

அது சரிதானே லெனின் என்னா சொல்லி இருக்கார்னா

"நமக்கு வெளியே ,நம்மை சார்ந்து இராமல் நிகழ்கிறது பருபொருளின் இயக்கம் .உதாரணமாக , ஈதர் அலைகள் விழிதிரையின் மீது படும்போது, மனிதப் புலனில் குறிப்புட்ட நிறத்தை . இப்படித்தான் பார்க்கிறது இயற்கை விஞ்ஞானம்

இதுதான் பொருள்முதல் வாதம் :
நமது புலன்களின் மீது பருபொருள் செயல்படும்போது புலனுணர்வை ஏற்படுத்துகிறது" 2

இதிலிருந்து என்ன தெரியுது நமது புலன்களுக்கு வெளியே பருபொருள் நிலவுகிறது என்பதுதான்

மேலும் புறப்பொருள் நமது புலன்களின் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதும் தான்.



ஆதாரங்கள்:


1. The wors of George Berkely , Vol I P.191

2. வி. இ .லெனின் பொருள் முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும்
(V.I lenin,collected Works, Vol. 14, p.55)

Burry one get one free


நன்றி: டெக்கன் க்ரோனிகல்

கருநாடக அரசியலில் முட்டை மேஜிக்!!!

செருப்பால் அடித்து கருப்பட்டியை நக்கக் கொடுத்தாலும் வாங்கி வெட்கமில்லாமல் நக்கும் அளவுக்கு இந்துத்துவ வெறியர்கள் வெட்கமோமானமோ ரோஷமோ இல்லாதவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான். அதிலும் அந்த வெல்லம் பதவி என்பதாக இருந்து விட்டாலோகேட்கவே வேண்டாம் அதில் பீயைத் தோய்த்துக் கொடுத்தால் கூட அதையும் சேர்த்தே நக்கத் தயாராக இருப்பார்கள் என்பது படு அப்பட்டமாக அம்பலமாகி இருக்கிறதுகருநாடகத்தில். இந்தப் போலி ஜனநாயகத்தின் மோசடிகளைப் பற்றி நாம் பலசந்தர்ப்பங்களில் பலவிதங்களில் எடுத்துச் சொல்லியிருந்தாலும்,ப்ராக்டிகல் எனப்படும் எதார்த்த அறிவை மக்களுக்கு ஊட்டியுள்ளதற்காக கருநாடக வோட்டுக்கட்சி அரசியல்வாதிகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

நல்லி எலும்பைக் கவ்வ அடித்துக் கொள்ளும் சொறி நாய்களைப் போல அதிகாரத்தைக் கவ்வ "மதச்சார்பற்ற" ஜனதா தளமும் பா.ஜ.கவும் கருநாடக மாநிலத்தில்அடித்த கூத்துகள் உலகப் பிரசித்தம்! இந்த ஜனநாயக நாடகத்தில் "தீடீர்" திருப்பமாக பா.ஜ.க பதவியேற்ற ஏழு நாட்களுக்குள் அதன் அரசாங்கத்தின் பீஸைப் பிடுங்கி விட்டுள்ளது கவுடா & சன்ஸ் கம்பெனி.. இதில் பேருக்கேற்றாற் போல் ஏதாவது "மதச்சார்பற்ற" காரணங்கள் இருக்கும் என்றுநீங்கள் நம்பினால் இன்னும் நீங்கள் இந்தியப் போலி ஜனநாயக மயக்கத்தில் இருப்பவர் என்று அர்த்தம்..
விஷயம் என்னவென்றால் இரண்டு கேப்மாரிகளில் எந்தக் கேப்மாரி பணம் கொழிக்கும் சுரங்கத்துறை, நிதித்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றைசூரையாடுவது என்பதில் தான் பிரச்சினையே. இதை தேங்காய் உடைப்பதைப் போல பட்டென்று சொல்லும் தைரியம் இருவருக்குமே இல்லை - இதில் மட்டும் தான் இருவருக்கும் கொளுகை ஒத்துமை! - தொலைக்காட்சி பேட்டிகளில் இரண்டு தரப்புமே மலவாயில் கட்டி வந்தவனைப் போலபலவாறு வளைந்து நெளிந்து நாட்டுமக்களுக்கு கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருந்தனர் நேற்று. இதில் உட்சபட்சமாக கவுடா & சன்ஸ் கம்பெனியைச்சேர்ந்த அடிமை ஒன்று "கருநாடகத்தை குஜராத் ஆவதில் இருந்து காப்பற்றவே நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றோம்" என்று ஒட்டுமொத்தமாகஇந்தப் பிரபஞ்சத்துக்கே பூச்சுற்ற முடியுமா என்று முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. உண்மையில் கடந்த இருபது சொச்ச மாதங்களில் கருநாடகத்தில் அதிகாரத்தை நன்றாகவே ருசி கண்டு விட்ட இந்துத்துவ கும்பல், அம்மாநிலத்தை தனது தென்னக குஜராத்தாக மாற்றியமைப்பதற்கானஅடிப்படை வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

பொதுவாகவே அடுத்தவனின் படுக்கையறை கழிப்பறை போன்றவற்றையெல்லாம் எட்டிப்பார்ப்பதில் விசேஷ ஆர்வம் காட்டும் ஊடகங்களுக்கு நேற்று பா.ஜ.க - கவுடா & சன்ஸ்கம்பெனி நடித்த போலி ஜனநாயக ஆபாசப்படமே பார்க்கக் கிடைத்தது காய்ந்த விட்டை தேடிப்போன பன்றி மலக்குட்டையில் தவறி விழுந்ததைப் போல் எதிர்பாராத ஜாக்பாட் ஆகிவிட்டது. நேற்று மாலை முழுவதும் காங்கிரஸ் பா.ஜ.க மற்றும் கவுடா & சன்ஸ் கம்பெனியைச் சேர்ந்த கோமாளிகள்எல்லா சேனல்களிலும் தோன்றி, தங்கள் அசிங்கமான அரசியல் மூஞ்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.. இதில் டைம்ஸ் நவ் ஆர்னாப் கோஸ்வாமிகேட்ட இரண்டு கேள்விகளுக்கு எடியூரப்பா அளித்த பதில்கள் இரண்டும் தான் எனக்குப் பிடித்த காமெடிக் காட்சியாக இருந்தது,

ஆர்ணாப் : - திரு எடியூரப்பா, நீங்கள் அமைத்த கூட்டனியானது எந்தக் கொள்கையின் அடிப்படையிலானது?

எடி : - கொள்கையெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு இருபது மாதம் அவர்களும் இரண்டாவது இருபது மாதம் நாங்களும் முதலமைச்சராக இருப்பதுஎன்பது தான் ஏற்பாடு.. இப்போது அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள்.

ஆர்ணாப் : - உண்மையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?

எடி :- திரு கவுடா என்னைக் கொல்ல முயற்சிக்கிறார். என்னைக் கொல்ல பல கோயில்களுக்குச் சென்று முட்டை மேஜிக் செய்வதாக எனக்குநம்பகமான தகவல்கள் வந்துள்ளது. எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு கவுடா குடும்பம் தான் காரணம்..

அட.. உண்மையா இப்படித்தாங்க அந்தாள் சொன்னான். இவனெல்லாம் இந்த நூற்றாண்டுல வாழ்றானா இல்ல ஒரு பத்து பதினைந்து நூற்றாண்டுக்குமுன்னே வாழ்றானான்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.. ஆனால் பா.ஜா.க என்னும் நியாண்டிரதால் சமுதாயத்தின் திட்டத்தையே கொள்கையாககொண்ட கட்சியில், இன்றைய சமூகத்தை அப்படியே பின்னுக்கு இழுத்து மீண்டும் நியாண்டிரதால் சமூகத்தை உண்டாக்க வேண்டும் என்பதையேலட்சியமாகக் கொண்ட கட்சியில், இப்படி சின்னப்புள்ளத்தனமா "ப்ளாக் மேஜிக்" பற்றியெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு மூளை வளர்ந்தவர்கள் தான் இருக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

அந்த லூசு பேட்டில "ப்ளாக் மேஜிக்" என்று தான் குறிப்பிட்டது, அதற்கு எங்கள் ஊரில் முட்டை மேஜிக் என்று தான் சொல்வோம்.. எனவேபுரிதலுக்காக அதே பதத்தை பயன்படுத்தி உள்ளேன்.

மொத்தத்தில் கருநாடக அரசியல்வாதிகள் போலி ஜனநாயகத்தின் நீள அகலம் என்னவென்பதை நாட்டுக்கு உணர்த்தியுள்ளனர்.. தமிழகத்தில் அடுத்ததேர்தலை குறிவைத்து காமெடி வில்லன் ராமதாஸில் இருந்து சீரியஸ் காமெடியன் விஜயகாண்டு வரையில் பெட்டை நாயைத் துரத்தும் காம வெறி கொண்டகடுவன் நாய்களைப் போல உருமிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகமக்களுக்கு இந்த நாடகங்கள் பல படிப்பினைகளைச் சொல்கிறது!

இந்திய தேசியமா பார்பனிய தேசியமா ஜெயலலிதா

"புலிகளை ஆதரிப்பவர் எல்லாம் இந்திய தேச

துரோகிகள் என்றார் ஜெயலலிதா?

நாம் இப்படி சொல்லலாம்

புலிகளை (அல்லது ஈழ தமிழரை ) ஆதரிப்பவர்கள்

எல்லாம் பார்பனிய தேச துரோகிகள் ?

ஆமாம் துரோகிகள் தாம் என சொல்லிக்கிறேன்

ஏனெனில்

புலிகளை ஆதரிப்பது இருக்கட்டும் ஈழ தமிழர்களை
காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கனும்
என்று காங்கிரசோ , அல்லது ஜெயலலிதாவோ
இதுவரை எதேனும் பேசி இருக்கிறார்களா என்றால்
இல்லை

கலைஞர் ஒரு கவிதை எழுதியதும்
அதை வைத்து அரசியல் பன்றாங்கன்னு பொதுவா

சொன்னாலும் இதன் உள்ளார்ந்த விசயம்

என்னவென்றால் ?

தமிழன் திராவிடன் என சொல்லப்படும்

இனத்தோடெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஒட்டும் இல்லை

உறவும் இல்லை என கோவிலில் ஆடுகெடாய்

வெட்டகூடாது எனும் அவரது சட்டத்தை வைத்தும் ,

மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்ததை வைத்தும்
சொல்லிவிடலாம் செயலலிதா ஒரு பார்பனிய
திமிர் பிடிச்சவர் என்று .

சரி இந்திய தேசத்துரோகிக்கும் இதுக்கும் என்ன

சம்பந்தம்னு கேட்டீங்கன்னா

அந்த அம்மையார் சொல்வது பார்பனிய தேசியம்

அதாவது மொட்ட பார்ப்பானுகளும் ஆதிக்க சாதிகளும்
குஜராத்தில் இரத்த படுகொலை செய்தார்களே
அந்த பார்பனியம்

இந்த நாட்டில் உள்ள தீமைக்கெல்லாம் முஸ்லீம்கள்தான்
காரணம் என சொல்லி அந்த அப்பாவிகளை

கொல்கிறார்களே அந்த பார்ப்பனியம்

மணல் மேட்டை இராமர் பாளம் என சொல்லி
அரசியல் செய்து நக்கி பிழைக்கிறார்களே

அந்த பார்பனியம்தான்

அந்த பார்பனிய தேசியம்தான் ஜெயலலிதா சொல்லும்

பார்பனிய தேசியம்

இந்த பார்பனிய வெறித்தனம்தான் தெகல்கா டாட்காமால்

நிரூபிக்கப்பட்டுள்ளது ." என்று எழுதினேன்

உடனே ஓடி வந்தார் ஒருத்தர் .

ஏப்பா வேணும்னா ஜெயலலிதாவை திட்டு

ஏன் பார்பனர்களை மொத்தமா திட்டுகிறாய்

என்றார்

சரி ஏன் திட்டகூடாதுன்னு கேட்டது

பார்பான் என்றால் எல்லாரையும் சமமாக

பார்ப்பான் அவந்தான் பார்ப்பான் என்றார்

அதன் படி ஜெயலலிதா பாப்பாத்தி இல்லையாம்

ஜெயலலிதா நான் பாப்பாத்தின்னு சட்ட சபையிலெயே
சொல்லி இருக்காங்களே என்றேன் .

நான் அவரை பாப்பாத்தின்னு ஒத்துகளை என்றார்


நான் கேட்டேன் சரி அப்ப நீங்க சொல்லும் இலட்சணத்தோடு இருக்கும் பார்பான்கள்

சிதம்பரத்தில் தமிழில் பாட போராடும்

ஆறுமுக சாமிக்கு ஏன் உதவவில்லை என்றேன்

அது சட்ட பிரச்சனை

என்றார்

சரி பார்பனர்கள் பார்பன திமிர் உள்ளவரை

பார்பன திமிர் என்று சொல்வதால்

உங்களுக்கு என்ன பிரச்சனை என்றதும்

பொதுவா அப்படி சாதியை சொல்லி திட்டகூடாது

என்றாரே பார்க்கலாம்

அரண்டு போயிட்டேன்.

ஒரு பார்ப்பானே தன்னை பார்ப்பனன் என சொல்லிகொண்டு திமிரா பேசினாலும்

நாங்க அதை பார்ப்பன திமிர்னு சொல்வது தப்பாம்

பொது நீதி படி

சாதி இல்லையாம் சாதி ஒழிந்து விட்டதாம்


நான் கேட்கிறேன் இவரை

சாதிதான் ஒழிஞ்சுடுத்தே ஏன் பார்பன திமிர்னு சொன்னதும் உங்களுக்கு கோபம் வருது

நீங்க பார்பானா?

உடனே இதுக்கு மேல பேச வேணாம்

என பேச்சை நிறுத்தி விட்டாருங்க

தனது சாதியை சொல்லி திட்டும் போது மட்டும் கோபம் வரும் இந்த நபர்

தனது சாதியின் பேரை சொல்லி திமிர் பேசும் நபர்களை அந்த கூட்டத்தை ஏன் கண்டிபப்தில்லை

அவருக்கான கேள்விகள்
----------------------------------
1. இம்மாதிரி சாதி பெருமை பேசும் தன் சாதிமக்களை கண்டுக்காம இருப்பவன் என்னைய்யா பார்ப்பான்

2.உலகத்தை திருத்த முடியாதுன்னு மூடிட்டு இருப்பேல்ல
இப்ப மட்டும் ஏன் வாய திறக்கிற

3.எதிர்ப்பு குரலை அடக்க மட்டும் பொது நீதி சாதி இல்லைன்னு பேச வரும் குடுமிகள் அராஜக குரலையும்
தட்டி கேட்கனும் என்று ஏன் தோன்றுவதில்லை

இது தாண்டா பல்டி!!

தெருவில் வாக்கிங் போய்க் கொண்டிருந்த சீத்தாராம் எச்சூரியையும் பிரகாஷ் காரத்தையும் வழியில் மடக்கிய சில குரங்குகள், இவர்களால் தமதுபிழைப்பே நாறிப்போய் விட்டது என்றும், இவர்களின் தொழில் ரகசியத்தை சொல்லிக் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கின்றன...

குரங்கு ஒன்று : - அய்யா, சிறப்பன முறையில் பல்டியடிப்பது எப்படி? நீங்கெல்லாம் அடிக்கும் பல்டியை பார்த்தால் எங்களுக்கெல்லாம்மார்கெட்டே போயிடும் போலிருக்கே!! உங்கள் தொழில் ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்து காப்பாத்துங்கையா.

ப்ரகாஷ் காரத் :- அது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான காரியமில்லை. முதலில் இவன் பல்டியடிக்க மாட்டான் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தைஏற்படுத்தனும். நான் அடிக்கமாட்டேன் அடிக்க மாடேன்னு சொல்லிச் சொல்லி ஒரு பிலிம் போடனும்.. அப்புறம் எல்லோரும் வாயத் தொறந்துட்டுஏமாந்து இருக்கும் போது சட்டுன்னு அடிச்சிடனும்..

குரங்கு இரண்டு :- ஒன்னும் பிரியலீங்களே..!

சீதாராம் எச்சூரி :- அதாவதுப்பா... பல்டியடிக்கறதுக்கு முன்னே எல்லார் பார்வையையும் நம்ம பக்கம் கொண்டாந்துடனும். நெறைய சவடால் அடிக்கனும்.. பெரிய பெரிய மனுஷங்க பேரெல்லாம் சொல்லி உதார் உடனும் - இந்த கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இப்படியாப் பார்த்து சிலபெயர்களை தெரிச்சி வச்சிக்கனும்.. நாங்கெல்லாம் அவர்களோட சீடர்கள்னு சும்மாங்காட்டிக்கு பீலாவுடனும்.. எல்லோரும் நம்பிக்கிட்டு இருக்கும் போதா பார்த்துஒரு அடி! ஒவ்வொத்தனும் அப்பிடியே வாயடச்சிப் போறா மாதிரி செய்துப்பிடனும்.. ஆமா..!

குரங்கு ஒன்று :- சரியா வெளங்கலையே... எதுனா உதாரணத்தோட சொல்லுங்களேன்..

காரத் :- இப்ப பாருங்க.. அணு ஒப்பந்தத்துல மேற்கொண்டு மனசுக்குள்ளே சிந்திச்சாலே நாங்க ஆட்சிய கலைச்சுடுவோம்னு அப்படியே உதார் விட்டோ மா..எங்களை இன்னும் நல்லவன்ன்ன்னு நம்பிட்டு இருக்கற மக்களெல்லாம் நிம்மதியா ஒரு பெருமூச்சு வுட்டாங்களா... அந்தப் பெருமூச்சு தீர்றதுக்குள்ளேசர்வதேச அணு சக்திக் கழகத்துல பேச்சு நடத்த தடையில்லேன்னும் சொல்லி அடிச்சோம் பாரு ஒரு பல்டி! அப்படி இருக்கனும்..

குரங்குகள் ஒரே குரலில் :- இதென்ன சரியான பேச்சுமாத்தா இருக்கு! இந்தப் நாறப்பொழப்பெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.. நாங்க திரும்பகாட்டுக்கே போறம்...

அப்பால மேட்டரு இன்னான்னா.... சிபிஎம் மடத்தோட சாமியாருங்கெல்லாம் வயக்கம் போல நீள நீளமா பிலிம் ஓட்டினு இருந்தாங்களே அணு சக்திஒப்பந்தத்தப் பத்தி... அவங்களோட அமெரிக்க அய்யாமாருகல்லாம் கல்கத்தாவுல வச்சி நேர்ல பார்த்த பின்னே, வயக்கம் போலவே ஓடுன பிலிம் ரோலஅவங்களே அறுத்துப்பிட்டாங்க..

சம்பந்தப்பட்ட செய்திகளின் தொகுப்பு :-

1) http://in.news.yahoo.com/071113/211/6n74g.html

"But on Tuesday, the party said it has allowed the government to discuss
the Indo-US nuclear with the International Atomic Energy Agency (IAEA), which
was a complete reversal of its stand that the deal must not be 'operationalised'
"

2) http://www.indiainfoline.com/news/innernews.asp?storyId=51412&lmn=1

"As expected, the UPA-Left committee on the Indo-US
civilian nuclear agreement allowed the Government to kick off negotiations with
the International Atomic Energy Agency (IAEA) for India-specific safeguards
"

3) http://www.timesnow.tv/NewsDtls.aspx?NewsID=4317

"It appears that the Communists have finally bowed
to the UPA on the Nuclear deal"

4) http://www.dnaindia.com/report.asp?newsid=1133294

"clarified that their decision to allow the UPA
government to approach the IAEA for India-specific safeguard talks was only to
save Prime Minister Manmohan Singh from embarrassment before the international
community."


5) http://www.deccanherald.com/Content/Nov162007/national2007111636099.asp?section=updatenews

"In a dramatic turnaround, the
Left parties on Friday allowed the Manmohan Singh government to initiate talks
with the IAEA on India-specific safeguards agreement for the operationalisation
of the Indo-US Nuclear deal."


என்னோட சொந்த சலிப்பு : ச்சே எல்லா பத்திரிக்கை லூசுகளும் இந்த நாதாரிகளை இன்னும் "கம்யூனிஸ்டுகள்" அப்படின்னு எழுதி நம்ப ரத்தக் கொதிப்ப ஏத்துறானுவப்பா!

தேவரின் பெயரால் பிழைப்பு வாதம்

தேவர் பெயரும் ஓட்டு வங்கியும்
------------------------------------------
செய்தி :நன்றி சற்றுமுன்

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜன் வெளியிட்ட கருத்து தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முத்துராமலிங்கத் தேவர் ஒரு ஜாதித் தலைவர் என்றும் அதனால் அவரது பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்கக் கூடாது என்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜன் பேசியிருப்பது அறியாமையின் வெளிப்பாடா அல்லது அறிந்தே பேசினாரா எனத் தெரியவில்லை.

நாடு முழுவதும் போற்றப்படும் தலைவர்களை, மக்கள் அவர்களது பண்பாலும், பாராட்டத்தக்க செயலாலும் மட்டுமே நினைவு கூறுகின்றனர். அவர் எந்த ஜாதியில் பிறந்தார் என்பதைப் பார்ப்பதில்லை. முத்துராமலிங்கத் தேவர் தேசியம், தெய்வீகம் என்ற இரு அம்சங்களுக்காக வாழ்ந்தவர் என்பதற்காகவே போற்றப்பட வேண்டியவர் என்றார்.

விமர்சனம் : தியாகு

சிலைகள் வைப்பதும் அதை திறந்து வைக்க விழா எடுப்பதுமாக தலைவர்கள் நாட்டு உழைத்தவர்களின் மேல் ஆளும் திமுக அரசும் இதற்கு முன்பு ஆண்ட அரசுகளும் காட்டி வரும் அக்கரையை நன்றாக கூர்ந்து நோக்கினால் .

ஓட்டு கணக்குதான் பிரதானமாக தெரிகிறது.

மதுரையில் மருதுசகோதரர்கள் சிலையை திறந்து வைத்தது மருது சகோதரர்கள் ஏற்றி வைத்த அன்னிய ஆதிக்க உணர்வை மீண்டும் கிளர்ந்தெழ செய்யும் நோக்கமா? இல்லை முக்குலத்தோரில் ஒரு குலமான சேர்வை இனத்தவரின் ஓட்டு வங்கியை பிரிக்கும் நோக்கம் தானே தவிர தூய தேசிய நோக்கம் எல்லாம் இல்லை இதில்.

இந்நிலையில் தேவரின் பெயரை சூட்டினார் தேவர் ஒரு சாதி தலைவர் என வரதராஜன் சொன்னதை கேள்வி கேட்கும் இல கணேசன்

தேவர் ஒரு தேசிய தெய்வீகத்தலைவர் என்கிறார்

இம்மானுவேல் கொலைவழக்கில் குற்றம் சாட்டபட்ட
ஒரு சாதி ஆதிக்க தலைவரை தேசிய மற்றும் தெய்வீக தலைவர் என இவர் எதற்காக சொல்கிறார் என்றால்

எந்த தேசியம் இவர்களுடையது ஆதிக்க சாதிகளின் தேசியம் இந்த தெய்வீகம் இவர்களது பார்பனிய தெய்வீகம் .

இந்தியாவில் பார்பனியத்தின் மீது தாக்குதல் விழுந்தால்
உடனே குரல் பஜகவிடம் இருந்து வருவது அதன் பார்பனிய ஆதரவு சிந்தாந்தம்

சாதி தலைவர் பெயரை வைப்பது

கலைஞரின் பிழைப்பு வாதம் நேராக

பார்பனியத்துக்கு வால்பிடிக்கிறது .

அதே நேரத்தில் வரதராஜன் பார்பனிய விரோதியா என்றால் அதை இன்னொரு நிகழ்வில் பேசலாம்