மார்க்ஸ் தன்னை பற்றி

கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அன்னாரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தை தருகிறது.

நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதல்ல. எனக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்க்ளும் விபரித்துவிட்டார்கள். நான் புதிதாக செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்

1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.

2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.

3. இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவிற்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும்.

- மார்ச் 5, 1852 Weydemeyer க்கு எழுதப்பட்ட கடிதம்

0 comments: