பாஸிஸ்டுகளின் வெற்றி !!

சமீபத்தில் 1933 மார்ச் 6ம் தேதி ஹிட்லரின் நாஜி கட்சி தேர்தலில் 43.9 சதவீத வாக்குகள் பெற்று வென்றது. தேர்தலுக்கு சில தினங்கள் முன்புரேய்ச்ஸ்டெக் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டு அந்தப் பழி கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்தப்பட்டது. வெறியூட்டும் பேச்சுக்களால் மக்களைசுயநினைவற்றவர்களாக மாற்றி நாஜிக் கட்சி இந்த வெற்றியை அடைந்தது. நாஜிக்கள் அதிகாரத்தில் இருந்த பன்னிரண்டு ஆண்டுகளும்அவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தனர். இந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மக்களிடையே கம்யூனிசத்தின் மேலானஅச்சத்தை பூதாகரமாக ஊதிப் பருக்க வைத்திருந்தனர்.

நாஜிக்கள் மக்களிடையே அச்சத்தின் அரசியலை நடத்தி அதன் மூலம் அவர்களிடையே கண்மூடித்தனமான வெறியை ஏற்றி அதன் மூலமேதமக்கான ஆதரவு தளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். கோயபல்ஸ் போன்ற தேர்ந்த பொய்யர்கள் மிகத் திறம்பட பொய்ப்பிரச்சாரத்தின்மூலம் மக்களை ஆடுமாடுகள் போல தமக்குப் பின் அணி திரள வைத்தனர். ஆரிய இனத் தூய்மை, யூத இன எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்புபோன்ற மக்கள் விரோத தளத்தின் மேலேயே நாஜிக்களின் சித்தாந்தங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தது.

பொதுவாக இது போன்ற பாஸிஸ்டுகள் ஒரு நார்ஸிஸ்டைப் போல தம்மையே ரசித்துக் கொள்ளும் மனநோய் கொண்டவர்கள். ஆங்கிலத்தில்பர்சனாலிடி கல்ட் என்பார்கள்; அதாவது தங்கள் தலைமையை ஈடுஇனையற்றது, கடவுளுக்கும் மேலானது, என்பது போல் ஊதிப்பெறுக்கிகாட்டுவதில் வல்லவர்கள் ( larger than life image). தமது குறுகிய வெற்றியை நிலையானது என்று நம்பும் மனநோயாளிகள் இவர்கள். கும்பல்சார் நீதியே இவர்கள் நம்பும் நீதியாகும். இது போன்ற பாஸிஸ்டுகளின் வீழ்ச்சியானது எந்தளவுக்கு கொடுரமாக இருக்கும் என்பது ஹிட்லரின்வீழ்ச்சியே நமக்குக் காட்டுகிறது.

பாஸிஸ்டுகள் தமது அரசியல் எதிரிகளை தேசத்துக்கே எதிரிகள் என்பது போல உருவகப்படுத்தி தேசிய வெறியை தூண்டி விடுவதை ஒரு முக்கியமானதந்திரமாகக் கொண்டிருப்பார்கள். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ஜெர்மானியின் விரோதிகள் என்பது போல சித்தரிப்பதில் ஹிட்லர் குறுகிய காலவெற்றியை பெற்றிருந்தான்.

நாஜிக்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத் தான் ஒரு மயிரளவும் பிசகாமல் பின்பற்றுகிறது இங்கேயுள்ள இந்துத்துவ பார்ப்பனிய பாஸிஸ்ட்கும்பல். இதில் அவர்களுக்கு அவ்வப்போது வெற்றியும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் வரலாற்றில் பாஸிஸத்துக்கு ஏற்பட்ட கதியை;அதற்கு ஏற்பட்ட முடிவை இவர்கள் சந்திக்கப்போகும் நாள் விரைவில் வந்தே தீரும். அன்று ஹிட்லரின் முதுகெலும்பை முறித்து அவனதுசித்தாந்தத்தை மரணக் குழிக்குள் அனுப்பியவரின் சீடர்கள் இந்திய ஹிட்லராக உருவெடுத்து வரும் மோடிக்கான மரணக்குழியை தோண்டுவார்கள்.

குஜராத் தேர்தல் நமக்கு நிறைய பாடங்களை போதிக்கிறது. ஹிட்லருக்கு எதிரி யூதர்களும் கம்யூனிஸ்டுகளும்; மோடி தனக்கு எதிரிகளாகஇஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் முன்னிருத்துகிறான். ஹிட்லர் எப்படி தனது அரசியல் எதிரிகளை ஜெர்மானியின் எதிரிகளாகவேசித்தரித்தானோ அதே போல் மோடியும் இஸ்லாமியர்களை இந்தியாவின் எதிரிகளாக சித்தரிக்கிறான். தேர்தல் மேடைகளில் முஷாரஃபை நோக்கிவாய்சவடால்களை வீசி இங்குள்ள முஸ்லிம்களும் முஷாரஃபும் ஒன்று தான் என்பதாக பெரும்பான்மை “இந்துக்கள்” மனதில் பதிய வைக்கிறான்.நாஜிக்கள் நடத்திய அதே அரசியல் தான் மோடியினதும் - அச்சத்தின் அரசியல்!!

ஹிட்லரைப் போலவே மோடியின் அடிப்பொடிகள் இவனை ஒரு பிதாமகனாக சித்தரிக்கிறார்கள். தேர்தல் கூட்டமெங்கும் மோடி கவர்ச்சியாகசிரிப்பது போன்ற முகமூடிகளை தொண்டர்கள் அணிந்து வலம் வருகிறார்கள். ஹிட்லரிடம் ஒரு கோயபல்ஸ் தான் இருந்தான் ஆனால் மோடியைச்சுற்றி இருப்பவர்களெல்லாம் கோயபல்ஸையும் விஞ்சும் வாய் வீரர்களாய் இருக்கிறார்கள். தெகல்காவினால் பச்சையாக அம்பலப்பட்ட பின்னும்எந்த வித வெட்கமோ கூச்சமோ இன்றி அந்தக் கொலைகளை தொலைக்காட்சி காமெராக்கள் முன்னே நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ரேய்ச்ஸ்டெக் கட்டிட எரிப்பின் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்திய ஹிட்லரைப்போலவே கோத்ரா ரயில் எரிப்பை முஸ்லிம்களை கொடூரமானவர்களாக காட்ட மோடி பயன்படுத்திக் கொண்டான். அந்த சம்பவங்களுக்குப் பின் ஹிட்லரைப் போலவே மிகத் தெளிவாக திட்டமிட்டு ஒரு இஸ்லாமிய இனவொழிப்பை நடத்திக் காட்டினான் மோடி. கொலைகளை ஜெர்மானிய பெருமை - ஆரியப் பெருமை என்னும் போர்வைக்குள் ஒளித்த ஹிட்லரைப் போலவே மோடியும் குஜராத்தி அஸ்மிதாவுக்குள் ஒளிக்கிறான். குஜராத்தி அஸ்மிதா என்னும் ஒளிவட்டத்துக்குள் சோராபுத்தின் சேக் போன்ற அப்பாவி முஸ்லிம் விட்டில்களின் ஆவிகள் ஏராளமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது.

மோடிக்கு எதிராய் குஜராத்தில் “அரசியல்” செய்யும் காங்கிரஸோ ஓனாயின் முன்னே நிற்கும் புடுக்கறுந்த சொறிநாய் போல கூனிக்குறுகிநிற்கிறது. மோடியின் அராஜக அரசியலைப் பற்றி முனகும் அளவுக்குக் கூட தெம்பில்லாமல் குரல்வளை அறுந்த பன்றியைப் போல தேம்பிக் கொண்டிருக்கிறதுகாங்கிரஸ். ஒருவேளை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றிருந்தால் கூட அது இந்துத்துவத்தின் தோல்வியாய் இருந்திருக்காது. இது பற்றிமுன்பு கார்க்கி பக்கங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் நாம் எழுதிய கட்டுரையின் சுட்டி இங்கே.

ஆனால் வரலாறு ஹிட்லர்களை எப்படி சந்தித்தது என்பது நம் முன் ஒரு பாடமாக இன்றும் நிற்கிறது. அன்று செம்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுதற்கொலை செய்து கொண்ட ஹிட்லரும் மரணக் குழிக்குள் நாஜிக்கள் அமிழ்த்தப்பட்ட சம்பவங்களும் நமக்கு நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது.இங்கும் பார்ப்பன பாஸிஸத்தை முறியடிக்கப்போகிறவர்கள் தோழர் ஸ்டாலினின் சீடர்களான கம்யூனிஸ புரட்சியாளர்கள் தாம்; நக்சல்பாரி அரசியலேஇந்துத்துவ கொடூரத்திற்கான சரியான தீர்ப்பை வரலாற்றில் எழுதப்போகிறது.

அது வரையில் மோடியின் வெற்றியென்னும் சிற்றின்பத்தால் இங்கே தமிழ் வலைத்தளங்களில் துடிக்கும் பூனூல்களுக்கு சொல்லிக் கொள்வது - அடங்குங்கடா…We are coming!!

4 comments:

said...

//அது வரையில் மோடியின் வெற்றியென்னும் சிற்றின்பத்தால் இங்கே தமிழ் வலைத்தளங்களில் துடிக்கும் பூனூல்களுக்கு சொல்லிக் கொள்வது - அடங்குங்கடா…We are coming ///

சொறிந்து சொறிந்து சுகம் கண்டு கொண்டிருக்கும் பாசிஸ்டுகளின் கர்வத்தில் காறி உமிழும் பதிவு....

we are coming!!!



ஸ்டாலின்

said...

//மதுசூதனன் / Madhusudhanan said...
//தேர்தல் முடிவை ஜனனாயகத் தீர்ப்பாக ஏற்கவேண்டும்,//

அப்படி போடுங்க. இதுக்கு பெயர் தான் ஜனநாயகம். அதை விட்டு என்னோட பதிவுலையும் சொல்றாங்க பாருங்க ஜனநாயகத்துக்கு விளக்கம். தாங்க முடியலை.
*********************************
//ஒருவர் திறமையாளராக இருக்கிறார் என்பதற்காக அவரின் குற்றச் செயல்களையும் ஆதரிக்கலாம் என்ற போக்கில் எனக்கு உடன்பாடில்லை//

ஒரு பேச்சுக்கு இதை மோடி பற்றிய விஷயமல்லாமல் பொதுவான ஒரு கருத்தாக எடுத்துக் கொள்வோம். குற்றமற்ற திறமையானவர்களின் சதவிகிதம் என்ன என்று சொல்லுங்களேன்.
*********************************
//இந்தியாவில் பெரிய வண்டி யார் ஓட்டுகிறாரோ அவர் தான் குற்றவாளி. தப்பு சின்ன வண்டி ஓட்டியவன் மீது இருந்தாலும்.//

:) நல்லா சொன்னீங்க போங்க. நானும் நிறைய அனுபவப் பட்டுட்டேன்
*********************************

இது விஷயமா நான் எழுதின பதிவு இதோ...//

எல்லா பூனூல்களும் எங்க அசெம்பெல் ஆகியிருக்குனு பாருங்க

said...

இது பூனூல் திமிர் மட்டுமில்லை நன்பரே, இந்த வார்த்தைகளில் தெறிக்கும் வர்க்கக் கொழுப்பை கவனியுங்கள்..

//இந்தியாவில் பெரிய வண்டி யார் ஓட்டுகிறாரோ அவர் தான் குற்றவாளி. தப்பு சின்ன வண்டி ஓட்டியவன் மீது இருந்தாலும்//

மது-சூது சொன்ன - "குற்றமற்ற திறமையானவர்களின் சதவிகிதம் என்ன என்று சொல்லுங்களேன்"

இந்த வரிகளின் அர்த்தம் "நாம கூடத் தான் சின்னச் சின்னதா நெறய தப்பு செய்யறோம் - ஏன் மோடியை மட்டும் குத்தறீங்க?" என்பதைப் போன்றது.. இந்த பார்ப்பனக் கொழுப்பிற்கு பல உதரணங்களைக் காட்ட முடியும் - லோக குரு காஞ்சி சுப்புணி சங்கரராமன் கொலை சமாச்சாரத்தில் மாட்டி லோல் பட்டுக் கொண்டிருந்த போது தினமலம், மற்றும் 'சோ'வின் எழுத்துக்களை படித்திருந்தால் பார்ப்பனக் கொழுப்பின் அடர்த்தி என்னவென்று தெளிவாக தெரியும்

said...

சரியான தருணத்தில் சரியான விமர்சன கூர்மையுடன் வந்துள்ள பதிவு. இது மறூகாலனிய சூழல் ஏகாதிபத்தியம் தனது முகமூடி கலைந்து பாசிச உண்மை முகத்தை கடை விரிக்கும் காலம். அதாவது இது புரட்சிகளின் காலம்... சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

ஆனால் எனது கவலை புரட்சிகர சக்திகள் மக்களை அடையும் வகையில் வேலை செய்யும் அளவு சித்தாந்த தலமையின்றி இந்தியா முழுவதும் இருக்கும் நிலைதான்.

இன்னும் பல நூறு பகத்சிங்குகளின் தேவையை மேலும் மேலும் அதிகமாக உணர்கிறேன். ஏனேனில் பாசிசத்துக்கு எதிரான யுத்தம் தெருக்களில் என்றாகிவிட்ட பிறகு மக்கள்தான் பாசிசத்துக்கு தண்டனை கொடுப்பவர்கள். மக்களை அணி திரட்ட பகத்சிங்கின் கூர்மையான நுண்ணறிவு நமக்கு தேவைப்படுகிறது. அவரது கட்டுப்பாடும், அவரது போர்குணமும் நமக்கு தேவைப்படுகிறது. நாம் பகத்சிங்காகவே மாற வேண்டியிருக்கிறது.

அசுரன்